சஜித் பிரேமதாசா தலைமையிலான எங்கள் ஆட்சி நூறுவீதம் பௌத்த ஆட்சி என்று சம்பிக்க ரணவக்க தெரிவித்ததாக மெட்ரோ பத்திரிக்கையின் செய்தி வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

Ahm Faisar என்ற பேஸ்புக் கணக்கில் ” இத நாங்க சொன்னா எங்கள மஹிந்த வாதி என்பார்கள் கஞ்ஞி பாய்மார் இதையும் பொய்யென்று வாதாடுவானுகள் ” என்ற பதிவோடு மெட்ரோ பத்திரிக்கையின் ஒரு பகுதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. குறித்த புகைப்படத்தில் சஜித் பிரேமதாச தலைமையிலான எங்கள் ஆட்சி நூறு வீதும் பௌத்த ஆட்சி அரசாங்கம் சிறுபான்மை மக்களுக்கு பணிந்து போகிறது

உடல் தகனம் விடயத்தில் அரசாங்கம் சலுகைகள் செய்யக்கூடாது

அரசாங்கம் சிறுபான்மை மக்களுக்கு வழங்கும் சலுகைகளை உடனடியான நிறுத்தப்பட வேண்டும் அரசாங்கம் கொடுக்கும் 5000 ரூபா கொடுப்பனவுகள சிறுப்பான்மையினருக்கே அதிகம் போய் சேருகிறது பெறும்பான்மை சிங்கள சமூகத்திற்கு முழுவதும் கிடைக்கவில்லை சிறுப்பான்மையினர் நல்ல நிலையிலேயே உள்ளனர் மேலும் கொரோனாவினால் இறப்பவர்களின் உடல்களை தகனம் செய்யும் விடயத்தில் அரசாங்கம் யாருக்கும் எந்த சலுகைகளையுமே செய்யக்கூடாது இந்த ராஜபக்ச அரசாங்கம் சிறுபான்மையினருக்கு அதிகம் பணிந்து போகிறது சஜித் பிரேமதாசா தலைமையிலான எங்கள் அரசாங்கம் நூறுவீதம் பௌத்த சாசனத்திற்கு அமைவாக பௌத்தர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆட்சியாகவே அமையும் இதில் சிறுப்பான்மை என்ற சொல்லுக்கே இடம் கிடையாது.

என்று இம் மாதம் 16ஆம் திகதி (16.05.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த பதிப்பில் பதிவேற்றம் செய்யப்பட்ட பத்திரிக்கையின் பிரதியில் பயன்படுத்தியுள்ள மெட்ரோ News பத்திரிக்கையின் இலச்சினை மெட்ரோ இணையத்தளத்தின் இலச்சினை ஆகும்.

மெட்ரோ நியூஸ் பத்திரிக்கையின் இலச்சினையில் Daily மற்றும் weekly என்ற இரு சொற்கள் பயன்படுத்தப்படும்..

மேலும் நாம் மெட்ரோ நியூஸ் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆர்.சேதுராமனை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு குறித்த செய்தி தொடர்பில் வினவிய போது, குறித்த செய்தி முற்றிலும் போலியானது என தெரிவித்தார்.

மேலும் இந்தப் போலிச்செய்தி தொடர்பில் தமது நிறுவனம் பொறுப்புடையது அல்ல எனவும் வாசகர்கள் இவ்வாறான போலிச் செய்திகள் தொடர்பில் வாசகர்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதற்கமைய ஜனாதிபதி சம்பிக்க ரணவக்க தெரிவித்ததாக மெட்ரோ பத்திரிக்கையில் வெளியான செய்தி என பேஸ்புக்கில் பகிரப்பட்ட மெட்ரோ நியூஸ் பத்திரிக்கையின் புகைப்படம் போலியானது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Conclusion: முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் ஜனாதிபதி சம்பிக்க ரணவக்க தெரிவித்ததாக மெட்ரோ பத்திரிக்கையில் வெளியான செய்தி என பேஸ்புக்கில் பகிரப்பட்ட மெட்ரோ நியூஸ் பத்திரிக்கையின் புகைப்படம் போலியானது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Avatar

Title:சம்பிக்க ரணவக்க பற்றி மெட்ரோ பத்திரிக்கையில் வெளியான செய்தி உண்மையா?

Fact Check By: Nelson Mani

Result: False