நட்ராஜ் நிறுவனத்தில் வீட்டில் இருந்து பென்சில் பொதி செய்யும் வேலையா?

Update: 2023-02-28 07:08 GMT

INTRO :
நட்ராஜ் நிறுவனத்தில் வீட்டிலிருந்து பென்சில் பொதி செய்யும் வேலை என ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):


Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் “ நட்ராஜ் பென்சில் நிறுவனம் வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பை வழங்குகிறது, 1 மாத சம்பளம் உங்கள் ✔30000

அட்வான்ஸ் 10000✔ பென்சில் பேக்கிங் செய்ய வேண்டும், வீட்டில் திறந்த பொருட்கள் வரும், பொருட்கள் பார்சல் டெலிவரி செய்யப்படும், படிக்காதவர்களும் செய்யலாம், படித்தவர்களும் செய்யலாம், பெண்களும் செய்யலாம்

வாட்ஸ்அப் எண் 8962053942 ✔ வாட்ஸ்அப் எண் ☎ , எந்த வேலையும் இன்றே தொடங்குங்கள் 8962053942 தாய் பிரசவம் ✔✔✔ என்ற முகவரிக்கு “ என இம் மாதம் 26 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு (26.02.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நட்ராஜ் பென்சில் நிறுவனம் வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பினை வழங்குகின்றதா என்ற தெரிய அவர்களின் இணையத்தளத்தினை ஆய்வு செய்தோம். இந்துஸ்தான் பென்சில்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் நட்ராஜ் பென்சில்களை தயாரிப்பதாகத் தெரிந்தது. அந்த நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்த்த போது, முதலில் ஒரு எச்சரிக்கை வீடியோ காணப்பட்டது.

hindustanpencils.com I Archived

குறித்த வீடியோ பதிவில், சமூக ஊடகங்களில் நட்ராஜ் பென்சில் வேலை வாய்ப்பு தொடர்பாக பரவும் தகவல் தவறானது என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், நட்ராஜ் பென்சில் முழுக்க முழுக்க தானியங்கி முறையில் தயாரிக்கப்பட்டு, பொதி செய்யப்பட்டு, விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. எனவே, வீடுகளில் வைத்து பொதி செய்ய வேண்டிய தேவையில்லை. போலியான தகவலைப் பரப்பி பண மோசடி நடக்கிறது. எனவே, கவனத்துடன் இருக்கவும் என்று கூறப்பட்டிருந்தது.

Full View

அவர்களின் உத்தியோகப்பூர்வ யூடியுப் பக்கத்திலும் இது குறித்தான பதிவும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

இது தொடர்பாக எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், நட்ராஜ் நிறுவனத்தில் வீட்டிலிருந்து பென்சில் பொதி செய்யும் வேலை என பகிரப்படும் தகவல் போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok

Conclusion: முடிவு


எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

.hocal-container {

border: 2px solid #000;

background-color: #eee;

border-radius: 5px;

padding: 16px;

margin: 16px 0

}

.hocal-container::after {

content: "";

clear: both;

display: table;

}

.hocal-container img {

float: left;

margin-right: 20px;

border-radius: 50%;

}

.hocal-container span {

font-size: 20px;

margin-right: 15px;

}

@media (max-width: 500px) {

.hocal-container {

text-align: center;

}

.hocal-container img {

margin: auto;

float: none;

display: block;

}

}

Title:நட்ராஜ் நிறுவனத்தில் வீட்டில் இருந்து பென்சில் பொதி செய்யும் வேலையா?

Fact Check By: S.G.Prabu

Result: False

Tags:    

Similar News