INTRO :
இணுவில் பகுதியில் 18 அடி உயரம் கொண்ட பூகோவா விளைந்துள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
Facebook Link– | Archived Link
சமூகவலைத்தளங்களில் “ யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தற்போது சுவிஸ் நாட்டில் வசிக்கும் சுந்தரேஸ்வரன் என்பவர் சுவிஸில் இருந்து கொண்டு வந்த விசேட பூக்கோவா.
விதையை யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் விவசாயம் செய்ததில் கிடைத்த 18 அடி உயரம் கொண்ட பூகோவா விளைந்துள்ளது.
இந்த பூக்கோவாவைப் பார்ப்பதற்கு பல பகுதிகளில் இருந்தும் மக்கள் அலை மோதுகிறார்கள்.
உண்மை தமிழனாக இருந்தால் இதை ஷேர் பண்ணுங்கள்.
பட உதவி Dr Sivachandran Sivagnanam “ என கடந்த மாதம் 27 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (27.06.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் முதலில் குறித்த புகைப்படத்தினை செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதா என கண்டறிய நாம் Hive Moderation என்ற செயற்கை நுண்ணறிவை கண்டறியும் இணையத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வினை மேற்கொண்டோம்.
அதில் குறித்த புகைப்படம் 99.4% செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
மேலும் huggingface இணையத்திலும் இதனை நாம் ஆய்வு செய்த போது, இது கணினி மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்று தெரியவந்தது.