ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ரவி மற்றும் கிரியெல்ல நாட்டை விட்டு சிலர் தப்பி சென்றதாக பரவும் தகவல் உண்மையா..?

By :  Gnana
Update: 2024-09-21 10:02 GMT

INTRO:

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ரவி கருணாநாயக்க மற்றும் லக்ஷ்மன் கிரியெல்ல நாட்டை விட்டு தப்பி சென்றதாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

 

Facebook Link | Archived Link

சமூக வலைத்தளங்களில் “சஜித் அணியின் ப.உ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியல்ல குடும்பத்தோடு நாட்டை விட்டு வெளியேறினார். ( கொழும்பு - கண்டி அதிவேகப் பாதை மோசடி செய்தவர் )” இம் மாதம் 20 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (20.09.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியினை தெரிவு செய்யும் ஜனாதிபதி தேர்தல் இன்று (21.09.2024) இடம்பெற்று கொண்டுள்ள நிலையில், சில ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த சிலர் நாட்டை விட்டு வெளியேறியதாக சில தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

அதற்கமைய ஐக்கிய மக்கள் சக்தியினை ஆதரித்த லக்ஷ்மன் கிரியெல்ல நாட்டை விட்டு வெளியேறியதாக ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

நமது குழுவினர் முக்கிய ஊடகங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் என இலங்கையின் முன்னணி செய்திகள் எதுவும் இவ்வாறானதொரு சம்பவத்தை அறிவிக்கவில்லை. இது தொடர்பாக நம்பகமான தகவல்கள் இல்லாததால், இந்த சமூக ஊடக அறிக்கைகளின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்தது.

இது குறித்து லக்ஷ்மன் கிரியெல்ல அவரின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் தான் நாட்டை விட்டு சென்றுவிட்டதாக பரவும் தகவல் முற்றிலும் போலியானது என பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Full View

Archived

மேலும் இன்று காலை அவர் தனது குடும்ப ஊறுப்பினர்களுடன் வாக்கினை அளிக்க சென்றபோது, எடுக்கப்பட்ட புகைப்படத்தினை பதிவிட்டு தாம் நாட்டில் உள்ளதினை உறுதி செய்துள்ளார்.

Full View

ரவி கருணாநாயக்க தொடர்பான அறிக்கைகளை சரிபார்க்க அவரது ஊடக செயலாளர் சானக சிறிவர்தனவை தொடர்பு கொண்டோம், மேலும் ரவி கருணாநாயக்க இலங்கையை விட்டு வெளியேறவில்லை என்பதையும் உறுதிப்படுத்தினார்.

அத்தோடு தாம் வாக்களித்து வந்ததை காணொளி பதிவாக அவரின் உத்தியோகப்பூர்வ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

https://www.facebook.com/share/r/f6j9H5BgGUxvHuqi/

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ரவி மற்றும் கிரியெல்ல நாட்டை விட்டு சிலர் தப்பி சென்றதாக என பரவும் தகவல் போலியானது என கண்டறியப்பட்டது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Claim :  ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ரவி மற்றும் கிரியெல்ல நாட்டை விட்டு சிலர் தப்பி சென்றார்
Claimed By :  Social Media User
Fact Check :  FALSE
Tags:    

Similar News