பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதல் என பகிரப்படும் காணொளி உண்மையா?

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-ஏ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் என்ற பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக ​​பல தசாப்தங்களாக நீடித்த இந்திய-பாகிஸ்தான் எல்லை மோதல் மேலும் தீவிரமடைந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக  நேற்று (2025.05.07) பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.  அந்தவகையில் குறித்த தாக்குதலின் போது எடுக்கப்பட்ட காணொளி என தெரிவிக்கப்பட்ட பல்வேறு காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் […]

Continue Reading

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக NPP பாடல் வெளியிட்டதா?

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் பலரு அரசியல் மேடைகளில் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி வந்தனர். அதேபோன்று இந்த தேர்தலை மையமாகக் கொண்டு பல போலியான செய்திகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தமையை காணமுடிந்தது. அந்தவகையில் தற்போது தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவச்சிலையை வல்வெட்டித்துறையில் அமைப்பதாக தெரிவித்ததாகவும் அதனை பரைசாற்றும் விதமாக ஒரு பாடலை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாகவும் ஒரு தகவல் […]

Continue Reading

சங்கக்கார  Daraz நிறுவனத்துடன் இணைந்து விளம்பர நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றாரா?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான குமார் சங்கக்கார Daraz  நிறுவனத்துடன் இணைந்து விளம்பர நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காண முடிந்தது. எனவே இது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link Facebook | Archived Link குறித்த பதிவில் வெறும் 618 ரூபாய்க்கு Samsung […]

Continue Reading

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் கைதானவர்களின் புகைப்படமா இது?

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் கைதான மாணவர்கள் என குறிப்பிடப்பட்டு புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை  எம்மால் காண முடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  குறித்த பதிவில் சபரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவனின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் மே 16ம் திகதி வரை சிறைச்சாலையில் […]

Continue Reading

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டியவை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், நிதிக் கட்டுப்பாடுகள், மற்றும் தேர்தலுக்கான வளங்களை பெற்றுக்கொடுப்பதில் இருந்த சவால்கள், அரசியல் எதிர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் பல முறை இந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.  இருப்பினும் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், உயர் நீதிமன்றத்தினால் வாக்களிப்பைத் தாமதப்படுத்துவதன் மூலம் அரசாங்கம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக அறிவித்ததன் பின்னர், 2025 மார்ச் 17 முதல் 20, ஆம் திகதி வரை உள்ளூராட்சி […]

Continue Reading

NPP வேட்பாளர்களினால்  குடும்ப விபரங்களை கோரும் விண்ணப்பப் படிவம் விநியோகிக்கப்பட்டதா?

நாளைய தினம் (2025.05.06) உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ளன. எனவே குறித்த தேர்தலை முன்னிலைப்படுத்தி அரசியல் கட்சிகள் தமது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில்  தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களினால்  குடும்ப விபரங்களை கோரும் விண்ணப்பப் படிவம் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்ட பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is […]

Continue Reading

தையிட்டி விகாரைக்கு எதிராக சிங்கள மக்கள் யாழில் போராட்டம் நடத்தினார்களா?

தையிட்டி விகாரைக்கு எதிராக சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் தையிட்டி விகாரைக்கு எதிராகச் சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டம் என தெரிவித்து கடந்த 2025.05.02 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் […]

Continue Reading

சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான நபர் ஸ்ரீதரனின் சகாவா?

கடந்த 13 ஆம் திகதி 16 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான நபர் இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை இணைப்பாளராகவும் ஸ்ரீதரனின் முழங்காவில் பிரதேச இணைப்பாளராக செயற்பட்டு வந்தததாகவும், ஸ்ரீதரனின் தனிப்பட்ட இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் […]

Continue Reading

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு நாளையுடன் நிறைவு

எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தற்போது அதற்கான தபால் மூல வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றன. அதற்கமைய கடந்த 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தபால் மூல வாக்களிப்பு நாளையுடன் (2025.04.29) நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று (28)  மற்றும் 29ஆம் திகதிகளிலும், தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகம், பொலிஸ் திணைக்களம், மாவட்ட செயலகங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது. இந்த நான்கு நாட்களுக்குப் பிறகு […]

Continue Reading

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு சுவாமி நித்தியானந்தா ஆசீர்வாதம் வழங்கினாரா?

சுவாமி நித்தியானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு ஆசீர்வாதம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த காணொளியில் வைத்தியர் அர்ச்சுனாவுக்கு வாழ்த்துக் கூறிய நித்தியானந்தா என தெரிவிக்கப்படடு கடந்த 2025.04.04 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact Check (உண்மை […]

Continue Reading

புதிய பாப்பரசராக வரக்கூடிய பெயர் பட்டியலில் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதா?

கத்தோலிக்க திருச்சபையின் ஆன்மீக தலைவராக 12 வருடகாலம் பணியாற்றிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று (2025.04.21) நித்திய இளைப்பாறினார். இதனைத் தொடர்ந்து புதிய பாப்பரசரைத் தெரிவு செய்யும் நடைமுறைகள் 15-20 நாட்களுக்கு பிறகு ஆரம்பமாகவுள்ள நிலையில் அடுத்த பாப்பரசராக தெரிவு செய்யப்படக் கூடிய பெயர்பட்டியலில் இலங்கையின் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக சில தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிகின்றது. எனவே அது தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ […]

Continue Reading

பிள்ளையானுக்கு எங்கள் அரசாங்கத்தினால் எந்த மன்னிப்பும் வழங்கப்படாது என இளங்குமரன் தெரிவித்தாரா?

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது. அந்தவகையில் தற்போது தமிழ் மக்கள் மேற்கொண்ட ஆயுதப் போராட்டத்தை ராஜபக்ஷக்களுக்கும் இராணுவத்திற்கும் காட்டிக்கொடுத்த பிள்ளையான் மற்றும் கருணாவிற்கு எங்கள் அரசாங்கத்தினாலும் ஜனாதிபதியினாலும் எந்த மன்னிப்பும் வழங்கப்படமாட்டாது என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன் தெரிவத்ததாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால்  காணமுடிந்தது. எனவே இது தொடர்பில் உண்மை […]

Continue Reading

மேடையில் வைத்து ட்ரம்பின் தலையில் ஒருவர் அடித்து விட்டுச் செல்லும் காணொளி உண்மையா?

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றதையடுத்து அவரின் வரி விதிப்புகள் தொடர்பில் உலக நாடுகள் அவர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த வண்ணமே உள்ளன. இந்நிலையில் கூட்டமொன்றில் பொதுமக்கள் மத்தியில் பேசிக்கொண்டிக்கும் போது அவரின் தலையில் ஒரு இளைஞர் அடித்துவிட்டு செல்வதைப் போன்ற காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே இது தொடர்பில் உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் […]

Continue Reading

பிள்ளையானை தேசப்பற்றாளர் என கம்மன்பில கூறியது ஏன்?

கடந்த 8 ஆம் திகதி குற்ப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டதனை தொடர்ந்து பல்வேறு கருத்துக்கள் சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காண முடிந்தது. அந்த வகையில் தற்போது பிள்ளையான் தொடர்பில் உதய கம்மன்பில தெரிவித்த விடயம் குறித்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் விடயம் தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook| Archived Link குறித்த பதிவில் Newsfirst […]

Continue Reading

மகாவலி ஆற்றில் வீழ்ந்த பெண்ணை பொலிஸ் அதிகாரி காப்பாற்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படமா இது?

மகாவலி ஆற்றில் வீழ்ந்த பெண்ணை பொலிஸ் அதிகாரியொருவர் காப்பாற்றிய சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் கடுகஸ்தொட்டை பாலத்திலிருந்து பாய்ந்த பெண்ணை ஒரு போலீஸ் அதிகாரி காப்பாற்றினார். கடுகஸ்தொட்டை காவல் பணியில், கட்டுகஸ்தொட்டை பாலத்திலிருந்து ஒரு இளம் […]

Continue Reading

இராமர் பாலம் கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டதாக பகிரப்படும் காணொளி உண்மையா?

“இராமர் சேது“ எனப்படும் இராமர் பாலமும் இராமாயண காலத்தை பறைசாற்றும் பல சுவடுகளும் தற்போது கடலுக்கடியில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே  இது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link நீங்கள் சுழியோடிகளாக இருந்தால் இராமர் சேதுவை ஆராயுங்கள் என்றும், கடவுள் இல்லை..இந்து மதம் என்று ஒன்று இல்லவே […]

Continue Reading

கொழும்பு உள்ளிட்ட சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடையுத்தரவு

இலங்கையில் நடைபெறும் நான்கு முக்கிய தேர்தல்களில், உள்ளூராட்சி தேர்தலானது மிகவும் சிக்கலான தேர்தல் முறையைக் கொண்ட ஒன்று என்றே கூற வேண்டும். பல்வேறு காரணங்களால் பல ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத்  தேர்தலை எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல  வாக்குப்பதிவு ஏப்ரல் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது. அன்றைய தினம் […]

Continue Reading

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பிரமுகர் வாகன பேரணியுடன் பயணித்தாரா?

அரசாங்கம் பிரமுகர் வாகன பேரணிகள் தமது ஆட்சியில் இடம்பெறாது என தற்போதைய அரசாங்கம் தெரிவித்த போதிலும், அவர்களும் இப்போது பிரமுகர் பாதுகாப்பு வாகன பேரணிகளுடனேயே பயணிப்பதாக தெரிவிக்கும் விதத்தில் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணக்கிடைத்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link “இப்போ எல்லாம் சின்ராச கையில பிடிக்கவே முடியாது […]

Continue Reading

கடலுக்கடியில் மயில் வடிவ ஆகாய விமானத்தின் எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டமை உண்மையா?

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள கடலில் மயில் வடிவ ஆகாய விமானத்தின் எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பான உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook| Archived Link குறித்த பதிவில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள கடலில் 3153 அடி ஆழத்தில் ஒரு மயில்வடிவ ஆகாய விமானத்தின் எச்சங்கள் […]

Continue Reading

ஹோமாகமையில் சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்திய சம்பவத்தில் கைதானவர்களா இவர்கள்?

ஹோமாகம பகுதியில் பாடசாலை மாணவி கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைதான 7 மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் புகைப்படமொன்று பகிரப்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிந்தது. எனவே இது குறித்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில்  சிறுமி பாலியல் பலாத்காரம் – மாணவர்கள் உட்பட 7 பேர் […]

Continue Reading