அஸ்வெசும் கொடுப்பனவு தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்ததாக பகிரப்படும தகவல் உண்மையா? 

ஜூன் மாதம் முதல் அஸ்வெசும பயனாளிகளில் ஒரு பகுதியினருக்கு அந்த நிவாரணங்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அடிப்படையாகக் கொண்டு போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள், தேர்தல் நெருங்கும் போது மீண்டும் அஸ்வெசும நிவாரணத்தை வழங்க வேண்டியேற்படும் எனக் குறிப்பிட்டதாகத் தெரிவித்து சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டுவருகின்றது. மேலும் இது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook  | Archived […]

Continue Reading

18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஜுன் 30 ஆம் திகதிக்கு முன்னர் TIN இலக்கத்தை பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதா?

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுவரும் வரி தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றம் அது குறித்த சட்டங்கள் சமூகத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. அந்தவகையில் தற்போது வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) ஜுன் 30 ஆம் திகதிக்கு முன்னர் அனைவரும் பெற வேண்டும் எனவும் அவ்வாறு பெறாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்து பல தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே அது தொடர்பான தெளிவினை மக்களுக்கு வழங்கும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் […]

Continue Reading

2025ஆம் ஆண்டில் இலங்கையில் 808 மில்லியன் டொலர் காணாமல் போயுள்ளதாக IMF அறிக்கை வெளியிட்டதா?  

2025ஆம் ஆண்டில் இலங்கையில் 808 மில்லியன் டொலர் காணாமல் போயுள்ளதாக IMF அறிக்கை வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் 2025ஆம் ஆண்டில் இலங்கையில் 80 மில்லியன் டாலர் காணாமல் போயுள்ளதாக IMF அறிக்கை வெளியிட்டுள்ளது சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள 143 […]

Continue Reading

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக காலாவதியான வெறிநாய்க்கடி தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டதாக பகிரப்படும் தகவல் உண்மையா?

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய றம்புக்வெல மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பலருக்கு எதிராக, தரமற்ற மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்த குற்றச்சாட்டின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைகளின் போது தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி வைத்திய நிபுணர் சவின் சேமகே கொழும்பு நீதிமன்றத்தில் சாட்சியமளித்திருந்தார். இதன்போது கொரோனாவை கட்டுப்படுத்த செலுத்த வேண்டிய தடுப்பூசிக்கு பதிலாக  காலாவதியான வெறிநாய்க்கடி நோய்க்கான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தபட்டுள்ளதாக அவர் […]

Continue Reading

குறைந்த விலையில் வீடு தருவதாகக் கூறி போலியான ஆவணங்கள் மூலம் பணம் பறிக்கப்படுவதாகப் பரவும் தகவல் உண்மையா?  

வாடகை வீட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் எதிரநோக்கும் பிரச்சினைகள் தற்போது நாட்டில் அதிகரித்து வருவதாக பல தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் கொழும்பில் வாழும் வாடகை வீட்டில் இருக்கும் குடும்பங்களுக்காக இந்த அரசாங்கத்தினால் குறைந்த விலையில் வீடுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக போலியான ஆவணங்களை சமர்ப்பித்து போலியான முகவர்கள் மூலமாக பணம் சம்பாதிக்க  முயலுகிறார்கள் என தெரிவித்து ஒரு சான்றிதழின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே இது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட் […]

Continue Reading

அண்மையில் போக்குவரத்து அபராதத் தொகைகள் அதிகரிக்கப்பட்டதா? 

மோட்டார் வாகன போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்படும் அதிகளவிலான அபராதத் தொகைகள் அடங்கிய பட்டியல் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. ஆகவே அண்மையில் போக்குவரத்து அபராத தொகைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்து ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link பத்தாயிரம் ரூபாய் Hire , 5000/=ரூபாய்க்கு ஓடுற.. புத்தளத்தில் ஓடும் தம்பிமார்களே சற்று கவனமாக இருக்கவும்… இதில் நான் இரண்டு […]

Continue Reading

எல் நினோ நிலைமை தொடர்பான தெளிவுபடுத்தல்!!! 

உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பதற்கும் அசாதாரண காலநிலை மாற்றங்கள் ஏற்படுவதற்கும் முக்கிய இயற்கை நிகழ்வுகளில் ஒன்றான ‘எல் நினோ’ (El Niño) நிலைமை தற்போது உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, எல் நினோ நிலைமை குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.  இத்தகையதொரு பின்னணியில், இந்த எல் நினோ நிலைமை தொடர்பாக ஃபேக்ட் கிரஸண்டோவின் தெளிவுபடுத்தல் பின்வருமாறு தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த […]

Continue Reading

உடனடி கடன்களை பெற்றுத்தருவதாக கூறி வரும் இணைப்புகள் தொடர்பில் விழிப்புடன் இருங்கள்!!!

நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள், அதேபோன்று பிரபலமானவர்களின் தோற்றம் அல்லது குரலை போலியாக செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தின் மூலம் உருவாக்கி போலியான நிதித் திட்டங்கள் தொடர்பில் தெரிவித்து அதன்மூலம் மக்களின் பணம் மற்றும் தனிப்பட்ட விபரங்களை திருடும் மோசடிச் செயற்பாடுகள் குறித்து ஃபேக்ட் கிரஸண்டோ நாம் தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி மக்களை தெளிவுப்படுத்தி வருகின்றோம். அந்த வரிசையில் தற்போது இணைய கடன் திட்டங்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் விளம்பரப் பதிவுகளாக பகிரப்பட்டு வருகின்றன. இவ்வாறான திட்டங்கள் உண்மையானவையா […]

Continue Reading

சிகையலங்கார நிலையத்தில் மசாஜ் செய்து கொண்டவர் உயிரிழந்ததாக பகிரப்படும் காணொளியின் பின்னணியில் உள்ள உண்மை என்ன?

சிகையலங்கார நிலையத்தில் முடி வெட்டிய பிறகு, ஒரு நபர் கழுத்து மற்றும் தலை மசாஜ் செய்துகொள்ளும் போது  அதன் ஊழியர் வாடிக்கையாளரின் கழுத்தை திடீரென நெட்டி முறிக்கும் போது, அந்த நபர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழப்பதனைப் போன்ற ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. எனவே அது குறித்து உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link […]

Continue Reading

திக்வெல பிரதேசத்தில் தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன் என பகிரப்படும் செய்தி உண்மையா?

மாத்தறை, திக்வெல பிரதேசத்தில் அண்ணனால் தம்பி வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக தெரிவித்து செய்தியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே குறித்த சம்பவம் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் தம்பியை கதற கதற வெட்டிசாய்த்த தமயன் – இலங்கையில் சம்பவம் என தெரிவிக்கப்பட்டு கடந்த 2026.06.07 ஆம் திகதி பகிரப்பட்டிருந்தது. மேலும் இந்த தலைப்பு […]

Continue Reading

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் புகைப்படங்களா இவை?

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளின் மூன்றாம் கட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பான புகைப்படங்கள் என தெரிவிக்கப்பட்ட பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link  குறித்த பதிவில் புதைகுழி ஒன்றினுள் ஓர் தமிழ் குடும்ப உறுப்பினர்கள்6 பேரை இருக்கையில்வைத்து கொன்றோ அரை […]

Continue Reading

Tracking சிப் பொருத்தப்பட்ட Keytag  மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளார்களா? 

விமான நிலையத்தினால் வெளியிடப்பட்ட அவசர எச்சரிக்கை என்ற வகையில், சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று பகிரப்பட்டு வந்தது. அந்தச் செய்தியில், பொலிஸாருக்கு கிடைத்துள்ள தகவலின்படி, பொது இடங்கள், விமான நிலையங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சாவிக்கொத்துக்களை (Keychains) விற்பனை செய்யும் ஒரு குற்றக் கும்பல் இயங்கி வருவதாகவும், இந்தச் சாவிக்கொத்துக்களுக்குள் உங்கள் வீட்டிற்கோ அல்லது உங்கள் வாகனம் நிறுத்தப்பட்டுள்ள இடத்திற்கோ பின்தொடர்வதற்கு (Track) உதவக்கூடிய கண்காணிப்பு சிப் (Tracking Chip) ஒன்று பொருத்தப்பட்டுள்ளது அதனால் விழிப்புடன் […]

Continue Reading

கண்ணாடி போத்தலில் நீர் ஊற்றி அதை நேரடி  சூரிய ஒளியில் வைத்து குடித்தால்  உடலுக்கு தேவையான விட்டமின் D கிடைக்குமா?

மருத்துவம் மற்றும் நோய்களுக்கான வீட்டு வைத்தியங்கள் தொடர்பில் அவ்வப்போது சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பகிரப்படுவதனை எம்மால் அவதானிக்க முடிகிறது. அந்தவகையில் தற்போது விட்டமின் D குறைப்பாடு உள்ளவர்கள் கண்ணாடி போத்தலில் தண்ணீர் நிரப்பி அதனை ஒருநாள் முழுவதும் சூரிய ஒளியில் வைத்திருந்து பிறகு நாம் அந்த நீரை குடித்தால் எமது உடலுக்கு தேவையான விடட்டமின் D கிடைக்கும் என தெரிவித்து ஒரு காணொளி சமூக ஊடகங்களில்  பகிரப்பட்டிருந்தது. எனவே இதன் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ […]

Continue Reading

இறக்காமத்தில் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் கைதான சந்தேகநபர் உண்மையில் மௌலவியா?

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள இறக்காமம் பகுதியில், 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கியுள்ளது. இந்த கொடூர குற்றத்தைச் செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் ஒரு “மௌலவி” (இஸ்லாமிய மார்க்க அறிஞர்) என ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் பரவின.  ஆன்மீக வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஒருவரே இத்தகைய பாதக செயலில் ஈடுபட்டாரா என்ற அதிர்ச்சியும் ஆத்திரமும் மக்கள் மத்தியில் எழுந்த நிலையில், உண்மையில் கைது […]

Continue Reading

குடிவரவு-குடியகல்வு திணைக்களம் LTTE அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய முத்திரையை அறிமுகப்படுத்தியுள்ளதா?

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய முத்திரைகளில், ஒரு முத்திரையில் புலி ஒன்றின் உருவம் இருப்பதாகவும், அது விடுதலைப் புலிகள் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்துவதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் புகைப்படப் பதிவுகள் பகிரப்பட்டிருந்தன. எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim): Facebook | Facebook  கடவுச்சீட்டுகளில், இலங்கைக்கு வருகை தரும் போது (Arrival) புலி ஒன்றின் உருவமும் பொறிக்கப்பட்ட முத்திரை பயன்படுத்தப்பட்ட […]

Continue Reading

ஈரானின் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க கடற்படைத் தளம் சேதம் என பரவும் காணொளி உண்மையா? 

ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஜக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளங்களுக்கு சேதம் என தெரிவிக்கப்பட்டு, காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் வளைகுடாவில் பதற்றம் தீவிரம் ஈரான் ஏவுகணை தாக்குதல் – UAEயில் அமெரிக்க கடற்படை தளங்கள் சேதம்! என […]

Continue Reading

2.5 மில்லியன் டொலர் சைபர் திருட்டு குறித்து விசாரிக்க அமெரிக்க FBI குழு இலங்கை வந்துள்ளதா? 

அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டியிருந்த 2.5 மில்லியன் டொலர் பணத்தையும், அமெரிக்க தபால் துறைக்கு செலுத்த வேண்டியிருந்த ஆறு இலட்சத்திற்கும் அதிகமான டொலர் பணத்தையும் சைபர் குற்றவாளிகள் வேறு கணக்குகளுக்கு மாற்றியமை தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளுக்கு ஆதரவளிப்பதற்காக, FBI முகவர்கள் குழுவொன்று ஏற்கனவே நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): […]

Continue Reading

எதிர்காலம் நிச்சயமற்றது, அடுத்த 3 மாதங்களை கணிக்க முடியாது என மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை விடுத்தாரா?

கடந்த 13ஆம் திகதி நடைபெற்ற நிதிக்குழு கூட்டத்தில், நாட்டின் பொருளாதாரம் நிச்சயமற்ற தன்மையில் இருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்ததாக சமூக ஊடகங்களிலும் பிரதான ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன. இதன் உண்மைத்தன்மையை கண்டறிவதற்கு ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.  தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link  வாக்களித்த மக்களிடம் வரையறை இல்லாமல் வரிகளை அதிகரித்து கஐானாவை நிரப்பி விட்டோம் என எகத்தாளம் இட்ட அநுர அரசு மக்களின் வாழ்வாதார […]

Continue Reading

மஹிந்த, நாமலுடன் சீமான் வாகனத்தில் பயணித்ததாக பகிரப்படும் படம் உண்மையா?

தமிழக அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் என்பது சர்வதேசளவில் பேசப்படும் விடயமாகவே பார்க்கப்படுகின்றது. அதேபோன்று தமிழக அரசியலில் சூழலில் இலங்கையின் தாக்கம் பல சந்தர்ப்பங்களில் பெரிதாக பார்க்கப்படும் ஒன்றாகவும் அமையும். அதற்கு காரணம் இலங்கையின் தமிழர் பிரச்சினைகள் தமிழக அரசியலில் எப்போதும் பேசுபொருளாக இருந்துள்ளது. அதில் சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சி பெரும் பங்கை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த சூழலில் தற்போது இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபக்ஷ மற்றும் அவரின் புதல்வரும் பாராளுமன்ற […]

Continue Reading

சீன ஜனாதிபதி முன் ட்ரம்ப் தலை குனிவதாக பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

சமீபத்தில் சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற சந்திப்பின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகிய இரு தலைவர்களும் கைகுலுக்கிய போது, ஷி ஜின்பிங்கிற்கு முன்னால் ட்ரம்ப் தனது தலையைக் குனிந்து வணங்குவது போன்ற புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link […]

Continue Reading