மஹிந்த, நாமலுடன் சீமான் வாகனத்தில் பயணித்ததாக பகிரப்படும் படம் உண்மையா?

தமிழக அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் என்பது சர்வதேசளவில் பேசப்படும் விடயமாகவே பார்க்கப்படுகின்றது. அதேபோன்று தமிழக அரசியலில் சூழலில் இலங்கையின் தாக்கம் பல சந்தர்ப்பங்களில் பெரிதாக பார்க்கப்படும் ஒன்றாகவும் அமையும். அதற்கு காரணம் இலங்கையின் தமிழர் பிரச்சினைகள் தமிழக அரசியலில் எப்போதும் பேசுபொருளாக இருந்துள்ளது. அதில் சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சி பெரும் பங்கை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த சூழலில் தற்போது இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபக்ஷ மற்றும் அவரின் புதல்வரும் பாராளுமன்ற […]

Continue Reading

சீன ஜனாதிபதி முன் ட்ரம்ப் தலை குனிவதாக பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

சமீபத்தில் சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற சந்திப்பின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகிய இரு தலைவர்களும் கைகுலுக்கிய போது, ஷி ஜின்பிங்கிற்கு முன்னால் ட்ரம்ப் தனது தலையைக் குனிந்து வணங்குவது போன்ற புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link […]

Continue Reading

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: புதிய ஆட்சி மாற்றமும் பரப்பப்பட்ட போலிச் செய்திகளும் – ஓர் ஆய்வு

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது — கடந்த அறுபது ஆண்டுகால திமுக – அதிமுக ஆகிய இருமுனை அரசியல் ஆட்சி அதிகாரத்தைத் தாண்டி நிகழ்ந்த முதல் ஆட்சி மாற்றம் இதுவாகும். ஆனால், இலங்கையில் வாழும் தமிழ் பேசும் சமூகங்களுக்கு, இந்த தேர்தல் தமிழ்நாட்டின் அரசியல் பரபரப்பையும் தாண்டிய ஒரு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. தமிழ்நாடும் இலங்கையும் தங்களுக்குள் ஆழமான டிஜிட்டல் தகவல் கட்டமைப்பைப் பகிர்ந்து கொள்கின்றன. தமிழ்நாட்டின் 7.7 […]

Continue Reading

மஹிந்தவிற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வந்த மக்கள் கூட்டத்தைக் காட்டும் புகைப்படமா இது? 

சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணை இந்த நாட்களில் பரவலாகப் பேசப்படும் ஒரு தலைப்பாக மாறியுள்ளது. இதற்கு இணையாக, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் குறித்த ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார். முன்னாள் ஜனாதிபதியின் இந்த வருகையின் போது எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அந்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் […]

Continue Reading

திஸ்ஸ விகாரை காணியை இரண்டாக பிரிப்பதற்கு திட்டம் என பகிரப்படும் தகவல் தொடர்பான தெளிவுபடுத்தல்!

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, தையிட்டி பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திஸ்ஸ ரஜமகா விகாரை தொடர்பாக அண்மைக் காலங்களில் சமூகத்தில் பெரும் பேசுபொருளாக மாறிய பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோன்று  திஸ்ஸ ரஜமகா விகாரை காணியை இரண்டாகப் பிரிப்பதற்கு வலிகாமம் வடக்கு பிரதேச சபை திட்டமிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட ஒரு பதிவு தொடர்பில் எமது தெளிவுபடுத்தல் கீழே தரப்பட்டுள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook |Archived Link  யாழ்ப்பாண வரலாற்றுச் சிறப்புமிக்க திஸ்ஸ […]

Continue Reading

Metaவினால் பயனர்களின் புகைப்படங்கள், தனிப்பட்ட தரவுகளை  பயன்படுத்த புதிய சட்டம் அறிமுகமாகியுள்ளதா?

நாம் வாழும் இந்த டிஜிட்டல் உலகில் சமூக ஊடக பாவனை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அந்தவகையில் சமூக ஊடகங்களில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் என தெரிவிக்கப்பட்ட பல தகவல்கள் பகிரப்படுவதனையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது. அவ்வாறு பேஸ்புக்கின் புதிய அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டு பகிரப்படும் தகவல் தொடர்பான உண்மையை கண்டறிவதற்காக ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் […]

Continue Reading

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைமுறைக்கு வந்துவிட்டதா?

இந்தியாவின் தமிழ் நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் வெளிவந்துவிட்ட நிலையில், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று முன்னிலை வகிக்கிறது. ஆனால் ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 என்ற பெரும்பான்மையை பெறாத காரணத்தினால் முதலமைச்சராக அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்பதில் இழுபறி நிலை நிலவிவருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவித்து தகவல்கள் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் […]

Continue Reading

ஹண்டா வைரஸ் தொடர்பான தெளிவுபடுத்தல்!!!

அட்லாண்டிக் கடலில் பயணித்துக் கொண்டிருந்த MV Hondius எனும் சொகுசு சுற்றுலா கப்பலில், ஹண்டா வைரஸ் (Hantavirus) தொற்று காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இதனைத் தொடர்ந்து, ஹண்டா வைரஸ் மற்றும் அதன் பரவல் குறித்து உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பலரது கவனம் திரும்பியுள்ளது. ஹண்டா வைரஸ் மற்றும் அதன் பரவல் குறித்து ஃபேக்ட் கிரஸண்டோ மேற்கொண்ட ஆயு்வு பினவருமாறு தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link […]

Continue Reading

பொது சேவைகளுக்கான VAT வரி 2.5% இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதா? 

எதிர்வரும் ஜூலை மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள வட் வரித் திருத்தச் சட்டத்தின் மூலம் வட் (VAT) வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகின்றது. இது குறித்த உண்மையைக் கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு பின்வருமாறு. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் தேசிய மக்கள் சக்தியின் AKD அரசாங்கம் அமைத்து 02 வருடத்திற்குள்; 1.VAT வற் வரி […]

Continue Reading

அமெரிக்க இராணுவ கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தும் காணொளியா இது?

மத்தியக் கிழக்கு போர்ச்சூழலில் சமாதானப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளபட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் ஈரான் ஐக்கிய அரபு இராச்சியம் மீது மேற்கொண்ட தாக்குதலை அந்நாட்டு படையினர் தடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று ஹோர்மூஸ் நீரிணையை கடக்க முயன்ற அமெரிக்க கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலின் போது எடுக்கப்பட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் ஒரு காணொளி பகிரப்படுவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே அது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை […]

Continue Reading

பார்கி அணை படகு விபத்தில் உயிரிழந்த தாய் மற்றும் குழந்தையின் புகைப்படமா இது?

கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பார்கி அணையில் சொகுசுப் படகு கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் துயரமான சம்பவத்திற்குப் பிறகு, ஒரு தாயின் உடலும் அவரது நான்கு வயது மகனின் உடலும் மீட்கப்பட்டன. அறிக்கைகளின்படி, தாயும் மகனும் ஒரே உயிர் காக்கும் அங்கியை (life jacket) அணிந்திருந்தனர் எனவும், மேலும் அந்தத் தாய் தனது குழந்தையை மார்போடு அணைத்தபடியே உயிரிழந்திருந்தார் உனவும் […]

Continue Reading

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதா?

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், கடந்த மார்ச் மாதத்தில் மாத்திரம் அரசாங்கம் மூன்று முறை எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியிருந்தது. இவ்வாறானதொரு பின்னணியில், கடந்த 2026.04.30 அன்று மீண்டும் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பதிவொன்று பகிரப்பட்டு வருகின்றது. உண்மையில் அவ்வாறு எரிபொருள் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is […]

Continue Reading

பங்களாதேஷ் வனத்துறையின் புதிய சீருடை விலங்குத் தோலின் வடிவில் அச்சிடப்பட்டதா?

சமீபத்தில், விலங்குத் தோலின் வடிவில் அச்சிடப்பட்ட  (Animal-print) ஆடைகளை அணிந்த இரண்டு நபர்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து வரும் பயனர்கள், இது பங்களாதேஷின் வனத்துறையின் சீருடை என தெரிவித்தே பகிர்ந்து வருகினற்னர். எனவே இது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் பங்களாதேஷ் இன் Forest Department Uniform […]

Continue Reading

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பெயரை பயன்படுத்தி இடம்பெறும் நிதி மோசடி!!!

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து இணையவெளியில் முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் குறித்து அண்மைக்காலமாகத் தொடர்ச்சியான தகவல்கள் பதிவாகி வருகின்றன. ஸ்ரீலங்கன் எயர் லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனத்தின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, “sri lankan.apk” எனும் போலிச் செயலி (App) ஊடாக முன்னெடுக்கப்படும் மோசடிகள் தொடர்பான தெளிவுபடுத்தல் பின்வருமாறு Explainer (விளக்கமளித்தல்)  இலங்கை பொலிஸாரின் அவசர எச்சரிக்கை: .apk கோப்புகள் மூலமான நிதி மோசடி தற்போது வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்கள் ஊடாகக் […]

Continue Reading

குருணாகல் வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்தமை உண்மையா?

சில சந்தர்ப்பங்களில் சமூக ஊடகங்கள் வாயிலாக, உணர்வுப்பூர்வமான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, நம்ப முடியாத செய்திகளை உண்மைச் சம்பவங்கள் எனக்கூறி, போலிச் செய்திகளை உருவாக்கிப் பகிர்ந்து வருவதை பரவலாகக் காணமுடிகிறது. அவ்வாறு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரே பிரசவத்தில் பிறந்த 9 குழந்தைகள் தொடர்பான ஒரு பதிவு குறித்து ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook |Archived Link  குருணாகல் போதனா வைத்தியசாலையில் தமிழ் தாய் […]

Continue Reading

“எங்களால் இப்படி தொடர முடியாது” என தெரிவித்து 12 எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் கடிதம் யைளித்தனரா?

ஆளும் தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 12 மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று, தற்போதைய ஆட்சியின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அவற்றைச் சரிசெய்யுமாறு கோரி பெலவத்தையிலுள்ள தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைமையகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link எங்களால் இப்படித் தொடர முடியாது.. […]

Continue Reading

லால்காந்தவின் சொத்து விபர அறிக்கை தொடர்பில் பகிரப்படும் தகவல்களின் உண்மை என்ன?

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிடம் அரசியல்வாதிகள்  தங்களது சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களில், அமைச்சர் லால் காந்தவின் சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புதான் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. தனது மகளின் கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாது என்று முன்பு கூறியிருந்த அமைச்சர் லால் காந்தா, இவ்வளவு சொத்துக்களை எப்படிச் சேர்த்தார் என்பது அரசியல் மேடைகளில் ஒரு […]

Continue Reading

ஜப்பானில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காணொளிகளா இவை? 

ஜப்பானில் வடக்கு கடலோரப்பகுயில் நேற்று (20) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு பல காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிகின்றது. எனவே அவற்றின் உண்மை தன்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில்7.5 ரிச்டரில் ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஜப்பான் […]

Continue Reading

ஹிரு ஊடக நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்களுக்கு  பாதுகாப்பு கோரிய கடிதம் உண்மையா?

அமைச்சர் லால் காந்தவின் சொத்து மதிப்பு அறிக்கையின் பெறுமதியைத் தவறாக வழிநடத்தும் வகையில் அறிக்கையிட்டதாக, ஹிரு ஊடக நிறுவனத்தின் மீது தற்போது சமூகத்தில் பரவலாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், இந்த நிறுவனத்திற்கு எதிராக எழுந்துள்ள சமூக எதிர்ப்பைக் சுட்டிக்காட்டி, ஹிரு தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு கோரி எழுதப்பட்ட கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது பகிரப்பட்டு வருகின்றது.  எனவே இது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை […]

Continue Reading

இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்ட இரண்டு குழந்தைகளின் எச்சங்களா இவை? 

இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்ட இரண்டு குழந்தைகளின் எச்சங்கள்  தங்கள் வீட்டின் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டு புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே இந்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link  இsரேலினால் படுகொ*லை செய்யப்பட்ட குழந்தைகள்  இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தங்கள் வீட்டின் இடிபாடுகளுக்கு அடியில் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்  என தெரிவிக்கப்பட்டு அந்த […]

Continue Reading