
INTRO :
வெளிநாடுகளில் இருந்து 400 பேர் இலங்கைக்கு பிள்ளைகளை கடத்துவதற்கு வந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ” *வெளிநாடுகளில் இருந்து 400பேர் இலங்கைக்கு இறங்கியுள்ளனர். பிள்ளைகள் கடத்துவதற்காக.. பெற்றோர்களே பிள்ளைகளை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். இது வரை எத்துனயோ பிள்ளைகளை கடத்தியிருக்குறார்கள். 400பேரில் ஒருத்தரை மட்டும் தான் பிடித்து உள்ளனர். அவனும் தில்லாக சொல்லி இருக்கிறான் என்னை மட்டும் தான் பிடித்தீர்கள் இன்னும் 399பேர் இருக்கின்றனர் அவர்களை முடிந்தால் பிடித்து காட்டுங்கள். நாங்கள் இன்னும் பிள்ளைகள் கடத்துவம் என்றும் சொல்லி இருக்கின்றான். பெண்கள் வேஷத்தில் சென்று கடந்துகின்றனர். மிக மிக கவனம் பெற்றார்களே.👏🏻* “ என இம்மாதம்10 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (10.03.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் முதலில் வீடியோவில் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி அவற்றை நாம் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம்.
இதன்போது, Asharq News பேஸ்புக் பக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு குறித்த வீடியோ பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது. மேலும் நாம் மேற்கொண்ட தேடலில் alhadath.net என்ற இணைய செய்திதளத்தில் வெளியாகியிருந்த செய்தியின் அடிப்படையில் இது எகிப்தினை சேர்ந்த 4 இளைஞர்கள் மேற்கொண்ட நாடக வீடியோ என தெரிவித்திருந்தது.

alhadath.net Link | Archived Link
குறித்த வீடியோவில் நடித்த 4 பேரும் எகிப்திய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் எகிப்தின் உள்துறை அமைச்சின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் அது குறித்தான தெளிவூட்டல் விளக்கம் வழங்கப்பட்டு வீடியோ வெளியிடப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.
மேலும் இது தொடர்பாக மேலதீக தகவல்களை பெற நாம் இலங்கை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவவை தொடர்புக்கொண்டு வினவியபோது, இணையத்தில் வைரலாகின்ற 400 பேர் குழந்தைகளை கடத்துவதற்காக இலங்கைக்கு வருகைத்துந்துள்ளனர் என்ற தகவல் முற்றிலும் தவறானது என எமக்கு உறுதி செய்தார்.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், வெளிநாடுகளில் இருந்து 400 பேர் பிள்ளைகளை கடத்துவதற்காக வந்துள்ளனர் என பரவும் வீடியோ எகிப்தில் 4 இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட நாடக வீடியோ என்று கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:வெளிநாடுகளில் இருந்து 400 பேர் பிள்ளைகளை கடத்துவதற்காக வந்துள்ளனரா?
Fact Check By: S.G.PrabuResult: False


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team