77ஆவது சுதந்திர தின நிகழ்வை ஒளிப்பதிவு செய்ய தனியார் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதா?

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வு நேற்று (2025.02.04)  இடம்பெற்றது. அதனை முன்னிட்டு பல்வேறு விதமான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. அந்தவகையில் இலங்கையில் உள்ள பிரபல யூடியூபர் ஒருவருக்கு அந்த நிகழ்வை ஒளிப்பதிவு செய்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவிற்கு மாத்திரமே அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டதாக குறித்த யூடியூபரினால் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த காணொளியில் அவர் தெரிவித்த […]

Continue Reading

இணக்க சபையின் உத்தரவிற்கமைய நாய் தூக்கிட்டு கொல்லப்பட்டமை உண்மையா?

நாயை தூக்கிட்டு கொல்வதற்கு ஒட்டுச்சுட்டான் இணணக்க சபை உத்தரவிட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் நாயை தூக்கிலிட்டு கொலை செய்த புகைப்படத்துடனான தகவல் ஒன்று பகிரப்பட்டு வந்தமையை காணமுடிந்தது. எனவே குறித்த தகவலின் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் ஒட்டுசுட்டான் மத்தியஸ்த சபையில் இன்று ஒரு விசித்திர தீர்ப்பு   வழங்கப்பட்டுள்ளது,,,, சசிதா என்பவர் தனது ஆடு […]

Continue Reading

பாடசாலை மாணவர்களுக்கு Strawberry Quik என்ற போதை மாத்திரை வழங்கப்படுவது தொடர்பான உண்மை என்ன?

தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பாடசாலை மாணவர்களிடம் ஒரு விதமான போதை மாத்திரைகள் விற்கப்படுவது தொடர்பான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் அனைவரும் ஜாக்கிரதை—- பள்ளிகளில் புதிய மருந்து… பள்ளியில் குழந்தைகள் இல்லாவிட்டாலும் இதை அனுப்புங்கள்.  […]

Continue Reading

அதானி நிறுவனத்தின் மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி வேலைத்திட்டத்தை புதிய அரசாங்கம் ரத்து செய்துள்ளதா?

அதானி நிறுவனத்துடன் கடந்த அரசாங்கம் ஒப்பந்தம் செய்துகொண்ட மன்னார் மற்றும் பூநகரி காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் புதிய அரசாங்கத்தினால் ரத்து செய்யப்பட்டுள்ளதான செய்திகள் சமூக ஊடகங்கள் உட்பட பிரதான ஊடகங்கள் வாயிலாக வெளியாகிய நிலையில் அரசு அவ்வாறான தீர்மானமொன்றை எடுத்துள்ளதா? என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்தோம்.  தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link புதிய அரசாங்கத்தினால் அதானி காற்றாலை மின்னுற்பத்தி வேலைத்திட்டம் ரத்தாகியுள்ளது என்பதை குறிப்பிட்டு சமூக […]

Continue Reading

டக்ளஸ் தேவானந்தா வாகனத்தில் ஐஸ் போதைப் பொருள் என பரவும் தகவல் உண்மையா ?

INTRO:  டக்ளஸ் தேவானந்தா வாகனத்தில் ஐஸ் போதைப் பொருள் கடத்தப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ கொழும்பிலிருந்து வந்த டக்ளசின் வாகனத்தில் ஐஸ் போதைப் பொருள்!  விசேட அதிரடிப்படை […]

Continue Reading

டுபாயில் இடம்பெற்ற வாகன விபத்தில் டேன் பிரியசாத் உயிரிழந்தமை உண்மையா?

கடந்த கால அரசியல் களத்தில் மிகவும் பேசப்பட்ட நபரான டேன் பிரியசாத் டுபாயில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்ளில் புகைப்படத்துடனான பதிவொன்று பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே இதன் உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link UAE இல் இடம் பெற்ற வாகன விபத்தில் டேன் பிரியசாத் உயிரிழந்ததாக தகவல்? […]

Continue Reading

சுபாஷ்கரனுக்கு செந்தமான சுவர்ணவாஹினியை ரேனோ சில்வா வாங்கப் போகிறாரா?

UPDATE: அல்லிராஜா சுபாஷகரனுக்கு சொந்தமான ஒருவன் பத்திரிகையின் அனைத்து செயற்பாடுகளையும் கடந்த 30 ஆம் திகதியுடன் முழுமையாக நிறைவு செய்வதாக அதன் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஒருவன் பத்திரிகையின் ஊழியர் ஒருவர் எமக்கு தெரிவித்தார். மேலும் 30 திகதி வரை ஒருவன் பத்திரிகையின் இணையபதிப்பு வெளிவந்ததாகவும் அன்றைய தினமே ஊழியர்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் ஒருவன் பத்திரிகையானது அல்லிராஜா சுபாஷ்கரனுக்கு சொந்தமான மற்றுமொரு நிறுவனமான South Eye Private Limited இன் கீழ் செயற்பட்டாலும் […]

Continue Reading

நடைமுறைக்கு வந்த புதிய மோட்டார் வாகன சட்டங்கள் என பரவும் தகவல் உண்மையா ?

INTRO:  இலங்கையில் நடைமுறைக்கு வந்த புதிய மோட்டார் வாகன சட்டங்கள் என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ சாரதிகள் கவனத்திற்கு -ஆப்பு ரெடி -நடைமுறைக்கு வந்த புதிய மோட்டார் […]

Continue Reading

QR முறையில் அரிசி விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதா?

சந்தையில் அரிசித் தடடுப்பாடு தொடர்பில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது QR முறையில் அரிசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காண முடிந்தது. எனவே இதன் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில்  QR முறையில் அரிசி வழங்க திட்டம் குறிப்பிட்ட கடைகளில் மாத்திரம் ஒரு குடும்பத்திற்கு […]

Continue Reading

கையடக்க தொலைபேசிகளின் IMEI எண்ணை கட்டாயமாக பதிவு செய்வது தொடர்பான தெளிவுபடுத்தல்

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் (TRCSL) அங்கீகரிக்கப்படாத கையடக்க தொலைபேசிகளை, இலங்கை தொலைபேசி வலையமைப்பிற்குள் இயக்க முடியாமல் தடைசெய்வது குறித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வந்தன. எனவே இது குறித்து உண்மை அறியம் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் ஜனவரி 29, 2025 முதல் லோக்கல் நெட்வொர்க்குகளில் இருந்து பதிவு செய்யப்படாத மொபைல் சாதனங்களைத் தடை செய்ய […]

Continue Reading

பாடசாலைகளில் மாணவர்களிடம் பணம் வசூலிக்கப்படுவது தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கங்களா இவை?

பாடசாலைகளில்  மாணவர்களிடம் சட்டவிரோதமாக பணம் வசூலிக்கப்பட்டால் அது தொடர்பில் கல்வி அமைச்சரான பிரதமரிடன் அறிவிக்க முடியும் என தெரிவித்து இரு தொலைபேசி இலக்கங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது. இது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் பாடசாலைகளில் சட்டவிரோதமாக மாணவர்களிடம் பணம் வசூலிப்பது சம்பந்தமாக முறைப்பாடு செய்தால் கல்வி […]

Continue Reading

நிழல் பாராளுமன்றத்தை ஸ்தாபிக்கிறாரா ரணில்..? – உண்மை தெரியுமா..? 

INTRO:   நிழல் பாராளுமன்றத்தை ஸ்தாபிக்கிறார் ரணில் என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “  நிழல் பாராளுமன்றத்தை ஸ்தாபிக்கிறார் ரணில்.! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நிழல் (மாற்று) பாராளுமன்றத்தை நிறுவுவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி […]

Continue Reading

புகையிரதத்தினுள் வெளிநாட்டு பயணிகளுக்கு மசாஜ் செய்யப்படுவதாக வெளிவந்த வீடியோவின் உண்மை தெரியுமா..?

INTRO:  ‘வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரயில் பிரயாணத்தின் போது புதிய விடயம் என வீடியோவொன்று சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பவரலாக பகிரப்பட்டு வந்தது. குறித்த வீடியோவில் சுற்றுலாப் பயணிகளுக்கு மசாஜ் செய்வது போன்ற விடயங்கள் காணப்பட்டன. இது வெளிநாட்டினரை ஈர்ப்பதற்காக புகையிரத திணைக்களம் மற்றும் வெளியுறவு துறை அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு விசேட திட்டம் என பலர் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது. புகையிரதங்களில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுகின்றதா எனவும் இது தொடர்பிலான உண்மையை தன்மையை தெரிவிக்குமாறும் எம்மிடம் […]

Continue Reading

இலங்கை மத்திய வங்கியினால் புதிய நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டமை உண்மையா?

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாணயத்தாள்கள் அச்சிடப்படுவது தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்து சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதனை எம்மால் காணமுடிந்தது. எனவே இது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link இலங்கையில் புதிதாக அச்சிடப்பட்ட நாணயத்தால் 50 மற்றும் 100 என தெரிவிக்கப்பட்டு […]

Continue Reading

பெளர்ணமி இரவில் ஒளிரும் சிகிரியா என பகிரப்படும் புகைப்படங்கள் உண்மையா?

INTRO வரலாற்று சிறப்புமிக்க சிகிரியாவை இரவில் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனை முன்னிட்டு கடந்த பௌர்ணமி தினம் முதல் அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டு அன்றைய தினம் ஒளியேற்றப்பட்ட சிகிரியா குன்று என தெரிவிக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டமையை எம்மால் காண முடிந்தது. எனவே இது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link ஒளியேற்றப்பட்டது சிகிரியாவுக்கு […]

Continue Reading

SCAM Alert: சரிபார்க்காமல் தெரியாத இணைப்புகளுக்குள் உட்செல்வதை தவிர்க்கவும்!

INTRO பல்வேறு நிறுவனங்களின் ஆண்டு விழாக்களை முன்னிட்டு பரிசுகள் மற்றும் இலவச டேட்டா வழங்குவதாக அவ்வப்போது சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை நாம் காண்கின்றோம். இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த தகவல்கள் போலியானவையாகவே காணப்படுகின்றன. இதுபோன்ற மோசடிகள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு செய்திகள் வந்தாலும், மக்களை கவரும் விதத்தில் பகிரப்பட்டு வரும் விளம்பரங்களினால் பொதுமக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர். இதன் காரணமாக இவ்வாறான போலி தகவல்கள் தொடர்பில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் […]

Continue Reading

தாதியர்களின் கடமை தொடர்பில் இராமநாதன் அர்ச்சுனா கூறியது உண்மையா?

INTRO கடந்த நாட்களில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அரச்சுனா வைத்தியசாலைகளில் தாதியர்களின் கடமைகள் தொடர்பில் கூறிய கருத்திற்கு சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே இது தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விபரம் (what is the claim) Youtube Link  | Archived Link குறித்த காணொளியானது மூதூர் வைத்தியசாலையில் நடந்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் இராமநாதன் அரச்சுனா தெரிவித்த கருத்தில் […]

Continue Reading

வலஸ்முல்ல பகுதியில் குழந்தை காணாமற்போன சம்பவம் தொடர்பான உண்மை என்ன?

INTRO கடந்த சில நாட்களாக பெண் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு அவரை கண்டுப்பிடித்து தரும் படியான பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்ததனை நாம் அவதானித்தோம். மேலும் இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருந்தமையும் இதன் உண்மைத் தன்மையை கண்டறியுமாறு பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டிருந்தமையும்  குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் குழந்தை காணாமற்போனதாக தெரிவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான உண்மைத் தன்மையை கண்டறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விபரம் (what is […]

Continue Reading

வங்கியால் பெறப்படும் அனைத்து வைப்புத்தொகை மீதான வட்டிக்கும் வரி அதிகரிக்கப்பட்டதா?

வங்கியால் வழங்கப்படும் வைப்புத் தொகை மீதான வட்டிக்கான வரி 10% வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருவதனை நாம் அவதானித்தோம். எனவே இது தொடர்பில் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபெக் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் அனைத்து வங்கி வைப்புக் கணக்குகளிலிருந்தும் 10 வீத வரி- போச்சுடா? என தெரிவிக்கப்பட்டு கடந்த […]

Continue Reading

TIME சஞ்சிகையின் ஆண்டின் சிறந்த நபராக இராமநாதன் அர்ச்சுனா தெரிவுசெய்யப்பட்டரா…?

INTRO:  TIME சஞ்சிகையின் ஆண்டின் சிறந்த நபராக இராமநாதன் அர்ச்சுனா தெரிவுசெய்யப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ Person Of The Year 2024 – Ramanathan Archchuna […]

Continue Reading