மொரகஹகந்த பாலம் உடைந்ததாக பகிரப்படும் தகவலின் உண்மை என்ன?

கடந்த நாட்களில் தித்வா புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையினால், மொரகஹகந்த  நீர்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டன. அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, மொரகஹகந்த அணைக்கு முன்பாக (மொரகஹகந்த – களுகங்கை ஆற்றோற்ட்டத்தின், அம்பன் கங்கைக்கு மேல் பகுதியில் அமைந்துள்ள) பாலம் உடைந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.  எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link மொரகஹகந்த பாலம் தற்போதைய நிலை […]

Continue Reading

திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பான தெளிவுபடுத்தல்! 

திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டமையானது தற்போது சமூகத்தில் பெரும் பேசுபொருளாகவே மாறியுள்ளது. அந்தவகையில் அகற்றப்பட்ட புத்தர் சிலை மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டாலும் சமூக ஊடகங்களில் இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றமையையும் எம்மால் காணமுடிந்தது. எனவே அது தொடர்பான தெளிவுபடுத்ததலை வழங்குவதற்காக ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link இதேபோன்று பல்வேறு விதமான தகவல்களுடன் இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு […]

Continue Reading

இளங்குமரன் மற்றும் ரஜீவன் தேசிய மக்கள் சக்தியிலிருந்து விலக தீர்மானித்துள்ளனரா?

தேசிய மக்கள் சக்தியின் யாழ். பாராளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன் மற்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் பௌத்த மயமாக்கலை எதிர்த்து கட்சியை விட்டு விலக முடிவெடுத்துவிட்டார்கள் என தெரிவிக்கப்பட்ட தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link இந்த பதிவை அதிகம் பகிருங்கள் தமிழ் மக்களின் பூர்விக தாயக நிலங்களில் சட்ட விரோதமாக […]

Continue Reading

வரவு – செலவுத் திட்டத்தில் கல்விக்கான ஒதுக்கீடு எவ்வளவு?

கடந்த 07 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் பாராளுமன்றில் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதிலிருந்து, இந்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. அதனடிப்படையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய எதிர்கட்சியில் இருந்த காலத்தில் கல்விக்கு 6% ஒதுக்க வேண்டும் என போராட்டங்களை நடத்தியதாகவும் தற்போது அவர்களின் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கு 1.2 % மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து […]

Continue Reading

மலையக மக்களுக்கு வழங்கப்பட்டது வெற்றுப் பத்திரங்களா?

மலையக மக்களுக்கான வீட்டு உரிமை வழங்கும் நிகழ்வு கடந்த 12 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் பண்டாரவளையில் இடம்பெற்றது. இதன்போது குறித்த உறுதிப் பத்திரம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்தமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த தெளிவினை வழங்க ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link காணி உறுதிபத்திரம் என்ற பேரில் NPP அரசாங்கம் அதன் ஆதரவாளர்கள் மற்றும் மக்களை […]

Continue Reading

60 வருடங்களுக்குப் பின் புதுப்பிக்கப்படுவதாக கூறப்பட்ட கொழும்பு மத்திய பஸ் நிலையம் தொடர்பான விளக்கம்!

கொழும்பு மத்திய பஸ் நிலையம் நவீனமயப்படுத்தல் பணிகள் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, சமூகத்தில் அந்த விடயம் பெரும் பேசுபொருளாகவே மாறியுள்ளது என்றே கூறவேண்டும். அந்தவகையில்  தற்போதைய அரசாங்கம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய பஸ் நிலையத்தை நவீனமயப்படுத்துவதாக அறிவித்திருந்தது. எனவே அந்தக் கூற்றின் உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): FB | FB | FB பிரதான ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலும் 60 ஆண்டுகளுக்குப் […]

Continue Reading

வீடுகளில்  பயன்படுத்தப்படும் வயர் கோர்டை அரசாங்கம் 72,000 ரூபாவிற்கு கொள்வனவு செய்துள்ளதா? 

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்துடன் தொடர்புடைய Power Distribution Unitsகளை வாங்குவதற்கான விலைமனு கோரப்படுவது குறித்து தற்போது சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காண முடிந்தது. எனவே அது தொடர்பான தெளிவினை வழங்கும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் அரசாங்கம் ஒரு பிரபல தொழிலதிபருக்கு எழுநூறு “மல்டி பிளக்” ஒவ்வொன்றும் சுமார் தோராயமாக […]

Continue Reading

AliExpress மூலம் ஆர்டர் செய்யப்பட்டு சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு என்ன நடக்கும்?

AliExpress,Temu,ebay போன்ற ஒன்லைன்  சந்தைகள், மக்கள் குறைந்த விலையில் பொருட்களை வாங்குவதற்கான சிறந்த இடமாக தற்போது மாறியுள்ளன.  இருப்பினும், இவற்றின் ஊடாக ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் இந்த பொருட்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து தற்போது சமூகத்தில் பாரிய பேசுபொருளாகவே மாறியுள்ளது. எனவே அது தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் தொடர்பான தெளிவினை வழங்க ஃபேக்ட் கிரஸண்டோ நாம் ஆய்வொன்றை மேற்கொண்டோம். தகவலின் விவரம் (What is the claim) […]

Continue Reading

WhatsApp கணக்குகளை ஹெக் செய்து இடம்பெறு பண மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருங்கள்!

இன்றைய நவீன யுகம் புதிய கண்டுப்பிடிப்புகளினால் வேகமாக முன்னேறிவருகின்றது. அதேபோன்று மோசடிக்காரர்களும் இந்த தொழிநுட்பங்களை பயன்படுத்தி அவர்களின் மோசடி யுத்திகளையும் வளர்த்துக்கொண்டே செல்கின்றார்கள் என்றே கூற வேண்டும். அந்தவகையில் இவ்வாறான மோசடிக்காரர்கள் டிஜிட்டல் தொழிகூட்பங்களை பயன்படுத்தி, உங்களுக்கு தெரிந்தவர்களைப் போல நடித்து உங்களை ஏமாற்றக் கூடும். எனவே அது குறித்த தெளிவை பின்வரும் கட்டுரை ஊடாக உங்களுக்கு பெறக்கூடியதாக இருக்கும் என நம்புகின்றோம். சமூக ஊடக தளமான WhatsApp கணக்குகள், மோசடி செய்பவர்களால் ஹேக் செய்யப்பட்டு அதன் […]

Continue Reading

பிளாஸ்டிக்கினால் ஏற்படும் ஆபத்தை அறிந்து கொண்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்போம்!

பல தசாப்தங்களாக, உலகின் ஒவ்வொரு மூலையிலும் பிளாஸ்டிக் பாவனை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. அப்படியானால், நாம் குடிக்கும் தண்ணீர், உண்ணும் உணவு மூலமாக நம் உடலை அது பாதிக்காது என்று எவ்வாறு கூற முடியும்? பிளாஸ்டிக் பாவனை ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தாலும், அது இன்னும் தீர்க்கக்கூடிய சுற்றுச்சூழல் சவால்களில் ஒன்றாகும் என்றும், அதற்கு தெளிவான தீர்வுகள் மிகக் குறைவு என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 2025 ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினம் “பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் […]

Continue Reading

புதிய கொரோனா தொற்றால்  பலியான குழந்தை என பகிரப்படும் தகவல் தொடர்பான தெளிவுபடுத்தல்

புதிய கொரோனா தொற்றால் இலங்கையில் பலியான முதல் குழந்தை என தெரிவிக்கப்பட்டு சில தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே இதன் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  குறித்த பதிவில் புதிய கொரோனா தொற்றால் இலங்கையில் பலியான குழந்தை விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை என தெரிவிக்கப்பட்டு ஒரு காணொளி கடந்த 2025.06.01 […]

Continue Reading

முதலைகள் நீரில் மூழ்குவது போல் நடித்து மனிதர்களை வேட்டையாடும் என பரவும் காணொளி உண்மையா?

INTRO: முதலைகள் நீரில் மூழ்குவது போல் நடித்து மனிதர்களை வேட்டையாடும் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “இந்தோனேசியாவில் முதலைகள் மனிதர்களை வேட்டையாட நீரில் மூழ்குவது போல் நடிக்கக் கற்றுக்கொண்டுள்ளன. ”இம் மாதம் 06 […]

Continue Reading

IPL தொடரின் எஞ்சிய போட்டிகளை இலங்கையில் நடத்த ஆலோசிக்கப்படுகின்றதா?

இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றம் காரணமாக ஐ.பி.எல் போட்டிகளை ஒரு வாரத்திற்கு இடைநிறுத்துவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கடந்த 2025.05.09 ஆம் திகதி அறிவித்தது. இதனையடுத்து இடைநிறுத்தப்பட்ட  ஐ.பி.எல் தொடரின் எஞ்சிய போட்டிகளை இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டு வருவதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் சில தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What […]

Continue Reading

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாவிட்டால் என்ன நடக்கும்..?

ஏழு வருடங்களுக்கு பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கடந்த 06 ஆம் திகதி நடைபெற்றது, இதன் மூலம் 28 மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளுக்கு 8,287 பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க இந்த தேர்தல் மேற்கொள்ளப்பட்டது. கல்முனை நகர சபை மற்றும் எல்பிட்டிய பிரதேச சபை தவிர்ந்த 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்பாளர்களை தெரிவுசெய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களுக்கமைய 49 அரசியல் கட்சிகள் இம்முறை தேர்தலில் போட்டியிட்டன. அரசியல் கட்சிகளின் சார்பில் 2404 குழுக்களும் […]

Continue Reading

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக NPP பாடல் வெளியிட்டதா?

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் பலரு அரசியல் மேடைகளில் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி வந்தனர். அதேபோன்று இந்த தேர்தலை மையமாகக் கொண்டு பல போலியான செய்திகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தமையை காணமுடிந்தது. அந்தவகையில் தற்போது தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவச்சிலையை வல்வெட்டித்துறையில் அமைப்பதாக தெரிவித்ததாகவும் அதனை பரைசாற்றும் விதமாக ஒரு பாடலை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாகவும் ஒரு தகவல் […]

Continue Reading

உயர்தர பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கேட்டுக்கொண்டாரா ?

INTRO :   உயர்தர பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கேட்டுக்கொண்டாதாக என சில பதிவுகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “உயர்தர பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை […]

Continue Reading

சுந்தரமூர்த்தி கபிலன் யாழ். மாநகர சபைக்கு போட்டியிட தகுதியற்றவரா?

ஏழு வருடங்களின் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டு தற்போது அதற்கான பணிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது யாழ். மாநகர சபையின் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சுந்தரமூர்த்தி கபிலன் வேட்புமனுவை தாக்கல் செய்த போது அவர் வழங்கிய முகவரி போலியானது எனவும் அவர் யாழ். மாநகர சபைக்கு போட்டியிட அடிப்படைத்தகுதியற்றவர் எனவும் தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் சில தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே குறித்த தகவல் […]

Continue Reading

சிங்கள மொழி பாடசாலையில் கல்வி கற்கும் தமிழ் மாணவன் மீது சக மாணவர்கள் டினர் ஊற்றி பற்ற வைத்தார்களா?

UPDATE: குறித்த சம்பவம் தொடர்பில் நாம் இன்றைய தினம் (2025.03.18) குறுந்துவத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொடர்புகொண்டு வினவியிருந்தோம். இதன்போது நேற்று (2025.03.17) சம்பவத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் ஏனைய மூன்று மாணவர்களும் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் சிறுவர் சீர்திருத்தப் பிரிவு அதிகாரிகளினால் கம்பளை நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும், இதன்போது கம்பளை நீதவான், 12 வயதிற்கு குறைந்த சிறுவர்கள் செய்யும் தவறுகளை நீதிமன்றத்தினால் தவறாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும், அவர்களை நீதிமன்றத்தினால் தண்டிக்க முடியாது எனவும் அறிவித்துள்ளார். மேலும் […]

Continue Reading

சுற்றுலாத் துறையை கவர்ந்த தபால் நிலையங்களை சுற்றுலா மையங்களாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளதா?

நாட்டில் உள்ள சில தபால் நிலையங்களை சுற்றுலா மையங்களாக மாற்றுவது குறித்த புதிய அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் தற்போது சமூகத்தில் பல்வேறு மாறுப்பட்ட கருத்துக்கள் பகிரப்பட்டு வரும் நிலையில் அது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் நுவரெலியாவில் உள்ள தபால் கந்தோரை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு ரணில் அரசு முயன்ற போது தொழிலாளர் […]

Continue Reading

சமூக ஊடகங்களில் பகிரப்படும் எச்சரிக்கை செய்திகள் தொடர்பில் விழிப்புடன் செயற்படுங்கள்! 

WhatsApp ஊடாக மக்களை அச்சமடைய செய்யும் பல தகவல்கள் பகிரப்பட்டு வரும் நிலையில் அது குறித்து ஃபேக் கிரஸண்டோ நாம் பல முறை உண்மையை கண்டறிந்து அறிக்கையிட்டுள்ளோம். மேலும் அவ்வாறான தகவல்கள் மற்றவர்களையும் விழிப்புடன் இருக்கச்செய்யும் விதத்தில் பகிரப்பட்டுவரும் நிலையில் தற்போது பகிரப்பட்டு வரும் மற்றுமொரு தகவல் குறித்து உண்மையை கண்டறியும் நோக்கில் நாம் ஆய்வொன்றை மேற்கொண்டோம். தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் மிக மிக […]

Continue Reading