
INTRO :
7 வெளிநாட்டு விஜயங்களுக்கு, 5 கோடி செலவு செய்த அமைச்சர் அலி சப்ரி என சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் “7 வெளிநாட்டு விஜயங்களுக்கு, 5 கோடி செலவு செய்த அமைச்சர் அலி சப்ரி!
மேலதிக தகவலுக்கு👇 (Video)
Youtube Link :https://youtu.be/QgKIql08D5E “ என இம் மாதம் 18 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு (18.06.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பாக முதலில் நாம் ஆய்வினை மேற்கொண்டபோது, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் டுவிட் பதிவு எமக்கு காணக்கிடைத்தது.
அதில் அவர் குறித்த தகவல் போலியானது குறிப்பிட்டிருந்தமை காணக்கிடைத்து.
இது தொடர்பாக நாம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியினை தொடர்பு கொண்டு வினவியபோது, இது தவறான தகவல் என தெரிவித்தார்.
மேலும், கம்போடியா, சுவிட்ஸர்லாந்து, அமெரிக்கா, பங்களாதேஷ் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு அவர் விஜயம் செய்துள்ளதாகவும் குறித்த விஜயங்கள் கீழ்வரும் மாநாடுகளுக்கு மேற்கொண்ட விஜயம் என தெரிவித்தார்.
- United Nations General Assembly (UNGA)
- United Nations Human Rights Council (UNHRC) – 2 times
- Indian Ocean Rim Association (IORA)
- ASEAN Regional Forum
- And the two bilateral visits were to the US & Saudi Arabia.
குறித்த பயணங்களின் மூலம் சர்வதேச நம்பிக்கை மற்றும் நாடுகளுக்கு இடையேயான நட்புறவை கட்டியெழுப்புவதன் மூலமாகவே IMF பேச்சுவார்த்தைகளுக்கு சாதகமான நன்மைகள் வழி வகுத்துள்ளது.
மேலும் கருத்துதெரிவித்த அமைச்சர் அலி சப்ரி சில வருடங்களின் பின்னர் இலங்கை வெளிவிவகார அமைச்சரை அமெரிக்காவிற்கு விஜயம் செய்யுமாறு அமெரிக்க வெளிவிவகார செயலாளரின் அழைப்பின் நிமிர்த்தமாக மேற்கொள்ளப்பட்டதாக கருத்து வெளியிட்டார்.
இந்த விஜயங்களின் காரணமாக இலங்கைக்கு அமெரிக்காவிடமிருந்து 270 மில்லியன் டொலர்கள் மற்றும் ஜப்பானிடமிருந்து 84 மில்லியன் டொலர்கள் நன்கொடையாகப் பெறப்பட்டதாகவும், சவூதி அரேபிய முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த பயணங்களை நான் தனியாக மேற்கொள்ள முடியாது, பல விடயங்களில் வெளிநாட்டு அரசாங்கங்களுடன் பேச்சுவார்தை நடத்தக்கூடிய அதிகாரிகளுடனே நான் செல்லவேண்டும், அப்படியான 22 அதிகாரிகளுடன் மேற்படி 7 வெளிநாட்டு பயணங்களை நான் மேற்கொண்டேன் எனவும், இது பணத்தை வீணாக்குவது அல்ல செலவை விட அதிக நன்மைகளை நாட்டுக்கு பெற்றுக்கொள்ள முடிந்தது என குறிப்பிட்டார்.
மேலும் குறித்த தகவல் விடியல் இணையத்தளத்தின் முகாமையாளர் மற்றும் ஊடகவியலாளரான Rifthi Ali விடியல் இணையத்தளத்தில் கடந்த 18 ஆம் திகதி வெளியிட்ட செய்தியின் விளைவாக மக்கள் மத்தியில் பரவிவருகின்றமை காணக்கிடைத்தது.
அவர் குறித்த செய்தியினை RTI வழங்கிய வெளிவிவகார அமைச்சரின் வெளிநாட்டு விஜயங்களின் போது ஏற்பட்ட செலவுகள் தொடர்பான அறிக்கையை மையப்படுத்தி வெளியிடப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.
அதில் அவரின் செய்தியில் வெளிவிவகார அமைச்சருடன் பயணித்தவர்களின் எண்ணிக்கையினை குறிப்பிடாமல் செய்தி வெளியிட்டிருந்தமையே இதற்கு முதல் காரணமாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் நாம் அவரை தொடர்புக்கொண்டு, குறித்த RTI அறிக்கையினை பெற்றபோது, அதில் கம்போடியா பயணத்தில் அமைச்சர் உட்பட 3 பேரும், சுவிஸ்லாந்து பயணத்தில் அமைச்சர் உட்பட 8 பேரும் ( இரு தடவையின் கூட்டுத்தொகை ), அமெரிக்கா பயணங்களில் அமைச்சர் உட்பட 5 பேரும் ( இரு தடவையின் கூட்டுத்தொகை ) , பங்களாதேஷ் பயணத்தின் போது அமைச்சர் உட்பட 5 பேர், சவூதி அரேபியா பயணத்தின் போது அமைச்சர் உட்பட 3 பேர் பயணத்து உள்ளனர். இதற்கமைய குறித்த பயணங்களில் அமைச்சர் உட்பட 22 பேர் மொத்தமாக பயணித்துள்ளனர்.

நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி, 7 வெளிநாட்டு விஜயங்களுக்கு, 5 கோடி செலவு செய்தார் அமைச்சர் அலி சப்ரி என பரவும் செய்தி தவறானது என்பது உறுதியாகின்றது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:7 வெளிநாட்டு விஜயங்களுக்கு, 5 கோடி செலவு செய்தாரா அமைச்சர் அலி சப்ரி?
Written By: S G PrabuResult: Misleading


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team