
INTRO :
இலங்கையில் கொரோனாவால் மரணிப்பவர்களை எரிப்பதற்கு எதிராக முஸ்லிம் மக்கள் போராடி வருகின்ற நிலையில் இலங்கையில் மரணித்த நாய் புதைக்கப்பட்டதாகவும் கொரோனாவால் மரணித்த குழந்தை எரிக்கப்பட்டதாக சில புகைப்படப்பதிவு இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
شهام محمد என்ற பேஸ்புக் கணக்கில் ” #குழந்தை_எரிக்கப்பட்டது!!!
#நாய்_புதைக்கப்பட்டது!!!
மனிதநேயம் அழிந்து போனது இலங்கையில்.” என கடந்த வருடம் டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி (19.12.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
பலரும் இதன் உண்மை தன்மையினை கண்டறியாமல் பகிர்ந்திருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
முதலில் நாம் குறித்த புகைப்படத்தொகுப்பில் இருந்த நாய் மரண நிகழ்வு புகைப்படத்தினை ஆய்வு செய்தபோது, குறித்த புகைப்படத்தின் கீழ் பதியப்பட்டிருந்த தகவலினை வைத்து நாம் பேஸ்புக்கில் நடத்திய சோதனையில் இது 2019 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற ஒரு நிகழ்வு என கண்டறிந்தோம்.
வீட்டு செல்ல பிராணிகளின் மரண நிகழ்வுகளை செய்யும் Boocat Pet Memorial Service என்ற நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இந்த புகைப்படம் காணக்கிடைத்தது.

நாம் அதில் மேற்கொண்ட மேலதிக தேடலின் போது, ஒரு நாயின் இறுதி கிரிகையில் தகனம் செய்யப்பட்ட ஒரு பதிவு எமக்கு கிடைக்கப்பெற்றது.

நாம் குறித்த நிறுவனத்தினை நாம் தொடர்புக்கொண்டு வினவியபோது, உரிமையாளருக்கு விரும்பியவாறு அவர்களின் செல்லபிராணியின் இறுதி கிரிகைகள் தாங்கள் செய்து கொடுப்பதாகவும், அவர்களுக்கு தனியாக ஓர் இடத்தில் நல்லடக்கங்கள் செய்து கொடுப்பதாகவும் மேலும் உரிமையாளருக்கு சொந்தமாக இடம் இருந்தால் அவ்விடத்தில் குறித்த இறுதி கிரிகைகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார்.
அதற்கமைய 2019 ஆம் ஆண்டு நடந்த குறித்த நிகழ்வினை தற்போது உள்ள சூழ்நிலையினையும் தொடர்புப்படுத்தி இலங்கையில் மனிதநேயம் அழிந்து போயுள்ளதாக மக்கள் மத்தியில் தவறான கருத்தினை பகிர்ந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:குழந்தை எரிக்கப்பட்டது நாய் புதைக்கப்பட்டதா? – உண்மை என்ன?
Fact Check By: Nelson ManiResult: Misleading