அமெரிக்க நாடான பனாமாவின் காட்டுப்பகுதியில் இருந்து கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 7 பேரின் சடலங்களை பொலிசார் மீட்டுள்ள சம்பவத்துடன் தொடர்பான புகைப்படங்கள் சில பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

Priyanka crime என்ற பேஸ்புக் பக்கத்தில் ” அமெரிக்காவை அதிரவைத்த சம்பவம்! குகைக்குள் காணப்பட்ட சடலங்கள்! ” என்று இம் மாதம் 17 ஆம் திகதி (17.01.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Facebook Link | Archived Link

IBC Tamil என்ற பேஸ்புக் பக்கத்தில் ” அமெரிக்காவை அதிரவைத்த சம்பவம்! குகைக்குள் காணப்பட்ட சடலங்கள்! ” என்று இம் மாதம் 17 ஆம் திகதி (17.01.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள முதலில் குறித்த இரு பதிவுகளில் இருந்த புகைப்படங்களை Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி ஆய்விற்கு உட்படுத்தினோம்.

IBC Tamil என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படமானது, கடந்த 2018 ஆம் ஆண்டு தாய்லாந்தில் 12 சிறுவர்கள் குகைக்குள் சிக்குண்ட சம்பவத்துடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டது.

Priyanka crime என்ற பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படமானது 2015 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குகையுடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டது.

குறித்த குகைக்குள் 6 தொடக்கம் 14 வயதுடைய சிறுவர்கள் மாயன் காலத்தில் கடவுளுக்கு பலியிடப்பட்டதாக விஞ்ஞானிகளால் நம்பப்படுகின்றது. மேலதிக தகவலுக்கு

மேலும் உண்மையிலே அமெரிக்காவில் பனாமா என்ற இடத்தில் குகைக்குள் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டதா என கண்டறிய நாம் மேற்கொண்ட ஆய்வில்,

Thesun News link | Archived link

பனாமா காட்டு பகுதியில் சடலங்கள் மீட்கப்பட்டது உண்மையான செய்தி என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் குறித்த செய்தியுடன் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்கள் போலியானவை என்பதும் உறுதி செய்யப்பட்டது.

Conclusion: முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், அமெரிக்க குகைக்குள் காணப்பட்ட சடலங்கள் என கூறப்பட்ட வெளியான புகைப்படங்கள் போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Avatar

Title:அமெரிக்க குகைக்குள் காணப்பட்ட சடலங்கள் என வெளியான புகைப்படம் உண்மையா?

Fact Check By: Nelson Mani

Result: Partly False