கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஓய்வு பெறுகிறாரா?

இலங்கை | Sri Lanka

INTRO :
கர்தினார் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தனது ஓய்வினை அறிவித்துள்ளதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link | newslink | Archived link

சமூகவலைத்தளங்களில் ” ஓய்வு பெறுகிறார் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை. “ என இம் மாதம் 21 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு  (21.12.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

எமது குழுவினர் இது தொடர்பாக உண்மை தன்மையினை கண்டறிவதற்கு கொழும்பு பேராயர் ஊடக பேச்சாளர் அருட்தந்தை ஜூட் கிறிசாந்த பெர்னாண்டோவை தொடர்பு கொண்டு வினவினோம்.

குறித்த செய்தியில் எவ்விதமான உண்மை தன்மையும் இல்லை என்றும், பேராயர் கர்தினார் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவ்வாறான எந்த முடிவையும் எடுக்கவில்லை என எமக்கு உறுதி செய்தார்.

கொழும்பு பேராயர்

திருத்தந்தை 16 ஆம் ஆசீர்வாதப்பரால் (போப் பெனடிக்ட் XVI) கடந்த 2009 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 16 ஆம் திகதி கொழும்பின் தற்போதைய பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் நியமிக்கப்பட்டார். மேலும் அறிவதற்கு

பேராயர்கள், ஆயர்கள் மற்றும் கார்டினல்களுக்கான சேவை காலம்

ஆயர்கள் 75 வயதில் தானாக ஓய்வு பெறுவது வழக்கம் என்றாலும், 2014 ஆம் ஆண்டில், 16 ஆம் ஆசீர்வாதிப்பரால் வெளியிட்ட புதிய உத்தரவின் படி, வத்திக்கானின் அதிகாரத்துவத்தில் பணியாற்றும் கர்தினால் அல்லாது ஆயர்கள் தங்களின் வயது எல்லை 75 தாண்டியும் பணியாற்ற முடியுமாறு மாற்றியமைக்கப்பட்டது. here. Archived Link

இன்னும் 75 வயதினை தாண்டி பணியாற்றும் 232 ஆயர்களின் பெயர் பட்டியல். குறித்த பதிவின் படி 53 கர்தினார்களில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பெயரும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதில் மேலும் இலங்கையினை சேர்ந்த 2 (இரத்தினபுரி மற்றும் பதுளை) ஆயர்கள் 75 வயதினை தாண்டி பணியாற்றி வருகின்றனர். 

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஓய்வு பெறுகிறார் என பகிரப்படும் செய்தி போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

இது தொடர்பாக எமது ஆங்கில பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். 

Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஓய்வு பெறுகிறாரா?

Fact Check By: S G Prabu 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *