அவுஸ்திரேலியாவில் வெள்ளம் என பகிரப்படும் புகைப்படங்கள் உண்மையா?

False சர்வதேசம் | International

அவுஸ்திரேலியாவில் தற்போது கடும் வெள்ளம் என இணையத்தில் சில புகைப்படங்கள் பகிரப்படுவது எமக்கு காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link 

Mohamed Muzammil என்ற பேஸ்புக் கணக்கில் ”அவுஸ்திரேலியாவில் தற்போது கடும் வெள்ளம் ஒட்டகத்தை கொண்டீர்கள் தண்ணீர் அதிகமாக குடிப்பது என்று சொல்லி எப்படி இறைவனின் தீர்ப்பு” என்று இம் மாதம் 18 ஆம் திகதி (18.01.2020) அன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்) 

முதலில் நாம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த புகைப்பட தொகுப்பிலிருந்து ஒவ்வொரு புகைப்படமாக எடுத்து Google reverse image tool ஐ பயன்படுத்தி தேடலிற்கு உட்படுத்தினோம்.

Google Search

குறித்த தேடலின் போது முதலை ஒன்று மரத்தின் மேல் ஏறிய நிலையில் காணப்படும் புகைப்படமானது கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி (04.02.2019) இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இரண்டாவது புகைப்படம்

இரண்டாவது புகைப்படமும் கடந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் எடுக்கப்பட்டது என உறுதி செய்யப்பட்டது.

மேலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதில் பகிரப்பட்ட மற்றைய புகைப்படங்களும் பழைய புகைப்படங்கள் என்பது உறுதிசெய்யப்பட்டது.

கடந்த 18 ஆம் திகதி (18.01.2020) அன்று அவுஸ்திரேலியாவில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருந்தது எமது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.

News link | Archived Link 

அவுஸ்திரேலியாவில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புடன் தொடர்புபடுத்தி பகிரப்பட்டுள்ள மேற்குறிப்பிட்ட புகைப்படங்கள் அனைத்தும் பழைய புகைப்படங்கள் என நாம் மேற்கொண்ட சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், அவுஸ்திரேலியாவில் வெள்ளம் என பகிரப்படும் புகைப்படங்களில் ஒரு புகைப்படத்தினை தவிர கடந்து வந்த வருடங்களில் அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது எடுக்கப்பட்டவை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Avatar

Title:அவுஸ்திரேலியாவில் வெள்ளம் என பகிரப்படும் புகைப்படங்கள் உண்மையா?

Fact Check By: Nelson Mani 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *