
தொடர் மழையின் போது மட்டக்களப்பு பகுதியில் மக்கள் வசிக்கும் வீடு பகுதிக்குள் முதலைகள் வந்ததாக புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

மட்டக்களப்பு என்ற பேஸ்புக் பக்கத்தில் ” எங்க #ஊர்ல எல்லாம் 😎மழைக்கு #முதலை🐊🐊🐊 தான் டா வரும் 😁 🧐” என்று கடந்த மாதம் 30 ஆம் திகதி (30.11.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த பதிவில் வெவ்வேறு வீட்டு வாசலின் முன் இருக்கும் முதலைகள் இரண்டின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள, முதலில் குறித்த புகைப்படங்களை Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி தேடலுக்கு உட்படுத்தினோம்.

குறித்த தேடலின் போது, முதலாவது முதலை புகைப்படம் 2016 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி இணையத்தில் முதல் முதலாக பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது களனி பிரதேசத்தில் இருந்து பிடிக்கப்பட்டுள்ளமை எமது ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. முழு அறிக்கை
அதேபோன்று இரண்டாவது புகைப்படத்தினை Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி தேடலுக்கு உட்படுத்தினோம்.
குறித்த தேடலின் போது அது கடந்த மாதம் 9 ஆம் திகதி (09.11.2019) அன்று பாலமீன்மடு கதிர்காமர் வீதியில் பிடிக்கப்பட்ட முதலையின் புகைப்படம் என உறுதி செய்யப்பட்டது. மேலும் அறிய
முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், மட்டக்களப்பில் கடந்த மாதம் 30 ஆம் திகதி குடியிருப்புகள் அருகில் முதலைகள் வந்ததாகக் கூறப்பட்ட தகவல் போலியானது என உறுதிசெய்யப்பட்டுள்ளது.