INTRO :
குருணாகல் பிரதான பஸ் தரிப்பிடத்தில் மயங்கி விழுந்த நபரின் புகைப்படத்தினை பகிர்ந்து வீட்டிலேயே இருங்கள் என்ற பதிவுடன் கொரோனா நோயாளியை போன்று கருத்தினை பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

குருணாகல் செய்திகள் என்ற பேஸ்புக் கணக்கில் #குருணாகல் பஸ் ஸ்டாண்டில் நேற்று.... #வீட்டிலேயே_இருங்கள், அத்தியாவசியமான ஒன்ருக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியேறுங்கள். ” என இம் மாதம் 19 ஆம் திகதி (19.05.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

இது தொடர்பாக நாம் குருணாகல் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு வினவிய போது,

‘’இவர் புத்தளத்திலிருந்து குருணாகல் நோக்கி பயணித்த நபர் என்றும், அதிக மது போதையில் இருந்தமையினால் பஸ்ஸிலிருந்து கீழே இறங்கும் போது தடுக்கி விழுந்துள்ளார்,’’ என தெரிவித்தார்.

மேலும், 1990 ஆம்புலன்ஸ் சேவையினை அழைத்து அவர் குருணாகல் வைத்தியசாலைக்கு அன்றே (19.05.2021) அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், இவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தவர் அல்ல என்றும் மது போதையிலேயே அவர் கீழே விழுந்துள்ளார் என்றும் எமக்கு தெரிவித்தார்.

இதனை மேலும் உறுதி செய்துக்கொள்ள நாம் குருணாகல் மாவட்ட பொது சுகாதார ஆய்வாளரை தொடர்பு கொண்டோம். குருணாகல் பிரதான பஸ் தரிப்பிடத்தில் பஸ்ஸிலிருந்து இறங்கும் போது கீழே விழுந்தவர் கொரோனா நோயாளி அல்ல என்பதோடு அவர் மது போதையிலேயே விழுந்துள்ளமையை எமக்கு உறுதி செய்தார்.

நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய குருணாகல் பஸ் தரிப்பிடத்தில் தரையில் விழுந்த நபர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர் என பகிரப்படும் தகவல் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:குருணாகல் பஸ் தரிப்பிடத்தில் தரையில் விழுந்த நபர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவரா?

Fact Check By: Nelson Mani

Result: False