
நுவரெலியா குதிரை பந்தயத் திடலைச் சூழவுள்ள பகுதிகள் மற்றும் காய்கறி பயிரிடப்பட்டுள்ள இடங்களில் கடந்த 10 ஆம் திகதி இந்தப் பூப்பனி பெய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link | News Link | Archived Link
New Lanka என்ற பேஸ்புக் பக்கத்தில் இலங்கையின் குட்டி லண்டனில் இன்று திடீரென ஏற்பட்ட மாற்றம்..!! பெருமகிழ்சியில் பொதுமக்கள்..!!” என்று இம் மாதம் 10 ஆம் திகதி (10.01.2020) அன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் குறித்த பதிவோடு Newlanka இணையத்தளத்தின் செய்தி லிக்கினையும் இணைத்திருந்தனர்.
Fact Check (உண்மை அறிவோம்)
முதலில் நாம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த புகைப்படத்தினை Google reverse image tool ஐ பயன்படுத்தி தேடலிற்கு உட்படுத்திய போது குறித்த புகைப்படமானது 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் ஊட்டி என்ற பிரதேசத்தில் இடம்பெற்ற பனி பொழிவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டது.

இதன் உண்மை தன்மையினை உறுதி செய்ய கூகுள் புகைப்பட தேடல் தளத்தில் ஊட்டியில் பனிப்பொழிவு 2018 என்று தேடுதல் செய்தோம்

அப்போது குறித்த தேடலின் போது நுவரெலியாவில் பூப்பனி என பகிரப்படும் புகைப்படம் காணக்கிடைத்தது.

Timesnownews இணைய செய்தியிலும் குறித்த செய்தி பதியப்பட்டிருந்தது.
குறித்த செய்தி தொடர்பில் மற்றைய ஊடகங்களில் வெளியான செய்திகள்
Oneindia | Newslink |
மேலும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தினை நாம் தொடர்பு கொண்டு வினவியபோது நுவரெலியாவில் பூப்பனி பெய்தமை ஊறுதி செய்யப்பட்டுள்ளதோடு, இலங்கையில் பனி பொழிவு இடம்பெறாது என்றும் தெரிவித்தனர்.
முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், நுவரெலியாவில் பெய்த பூப் பனி என பகிரப்படும் புகைப்படம் 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் ஊட்டி பிரதேசத்தில் பனிப்பொழிவு இடம்பெற்ற வேளை எடுக்கப்பட்ட புகைப்படம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.