
INTRO :
பிராக் லெஸ்னர் நைஜீரிய குழந்தைகளுக்கு உணவு கொடுத்தார் என ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “ பிராக் லெஸ்னர்💜
உலகினர் கண்களுக்கு கொடூரனமானவர்களாக தெரிபவர்கள் நிஜ வாழ்வில் இளகிய மனம் கொண்டவர்களாகதான் இருக்கிறார்கள்..!!
வறுமையில் வாடும் கென்ய நைஜீரிய குழந்தைகளுக்கு உணவு கொடுத்து மகிழ்ந்தார் பிரபல மல்யுத்த வீரர், பிராக் லெஸ்னர்..!! “ என இம் மாதம் 13 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (13.07.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் தமது வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் இது குறித்து ஆய்வினை மேற்கொண்டபோது, முதலில் நன்கு குறித்த புகைப்படத்தினை ஆவதானித்த போது, அதில் சில சிறுவர்களின் கண்கள் மற்றும் கரங்கள் போன்றவை யதார்த்தமானதாக அமைந்திருக்கவில்லை என்பதோடு, பிராக் லெஸ்னரின் வலது கையில் சில பகுதி குறித்த புகைப்படத்தில் இருக்கவில்லை.
ஆகவே குறித்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழ, நாம் அதனை Hive Moderation என்ற செயற்கை நுண்ணறிவை கண்டறியும் இணையத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு மேற்கொண்டோம்.
அதில் குறித்த புகைப்படம் 99.9% செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், பிராக் லெஸ்னர் நைஜீரிய குழந்தைகளுக்கு உணவு கொடுத்தார் என பரவும் புகைப்படமானது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒன்று, என கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:பிராக் லெஸ்னர் நைஜீரிய குழந்தைகளுக்கு உணவு கொடுத்தார் என பரவும் புகைப்படம் உண்மையா?
Written By: S G PrabuResult: False


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team