
Subscribe to our WhatsApp Channel
INTRO :
ஜனாதிபதி வேட்பாளரான திலித் ஜயவீர மற்றும் அவரின் பங்காளி அமைச்சர்கள் சேற்றில் நடந்து செல்லுவதை போன்ற புகைப்படமொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “ கக்கூஸ் கட்டப்போய் கக்கூஸ்ல இறங்கி நிக்கிறாங்கள்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச“ என இம் மாதம் 20 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (20.08.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் முதலில் குறித்த புகைப்படத்தினை நன்கு அவதானித்தபோது, இது முழுமையாக எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என காணக்கிடைத்தது. அதில் விமல் வீரவன்சவின் கையில் ஒரு பகுதியும், அவருக்கு பின்னால் இருந்த பொலிஸ் அதிகாரியின் உடலில் பாதி மட்டுமே தென்பட்டது.
ஆகவே நாம் குறித்த புகைப்படத்தினை ரிவஸ் இமேஜ் பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டபோது, கடந்த 17 ஆம் திகதி (17.08.2024) நட்சத்திர சின்னத்தில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர ஜனாதிபதி தேர்தலுக்கான தனது கன்னி பிரச்சாரத்தை அருண் சித்தார்த், விமல் வீரவன்சவுடன் யாழில் ஆரம்பிக்க சென்றிருந்த வேளையில் நல்லூர் கோவிலுக்கு சென்றபோது எடுத்த புகைப்படத்தினை எடிட் செய்துள்ளமை காணக்கிடைத்தது.
இணையத்தில் வைரலாகும் புகைப்படத்தினை நாம் ஒப்பிட்டு பார்த்தபோது, அது எடிட் செய்யப்பட்டுள்ளதாக, உறுதி செய்யப்பட்டது.
ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர நல்லூர் கோவிலுக்கு சென்றமை தொடர்பாக ஊடகத்தில் வெளியிடப்பட்டிருந்த செய்தி தொகுப்பும் எமக்கு கிடைக்கப்பெற்றது.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், திலித் ஜயவீர உட்பட பங்காளி அமைச்கர்கள் சேற்றில் நடந்த செல்லும் காட்சி போன்று எடிட் செய்த புகைப்படத்தினை பரப்பி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:திலித் ஜயவீர உட்பட பங்காளி அமைச்சர்கள் சேற்றில் நடந்து செல்லும் காட்சி உண்மையா?
Written By: S G PrabuResult: Altered


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team