
INTRO :
நடைப்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட கருத்துக் கணிப்பு என ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “ இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி முன்னிலை – ஐரோப்பிய ஒன்றியத்தினால் புதிய கருத்துக்கணிப்பு “ என இம் மாதம் 16 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (16.07.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது குறித்து ஆய்வினை மேற்கொண்டபோது, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் நாம் ஆய்வு செய்தபோது, இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு எதுவும் அவர்களால் வெளியிடப்படவில்லை என கண்டறியப்பட்டது.
மேலும் இது குறித்தான செய்திகள் எதுவும் பிரதான ஊடகங்களில் வெளியாகியுள்ளதா என்று ஆய்வு செய்தபோது, அவ்வாறான செய்திகள் எதுவும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை.
இதன் உண்மைத்தன்மையினை உறுதிசெய்துகொள்ள இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் துணைத் தலைவர் Bredal Lars-ஐ நாம் நேரடியாகத் தொடர்பு கொண்டு இதுகுறித்து வினவியபோது, அவர், “ஐரோப்பிய ஒன்றியம் எந்த ஒரு கணக்கெடுப்பையும் நடத்தவில்லை; இணையத்தில் பகிரப்படும் தகவல் போலியானது” என்று எமக்கு உறுதி செய்தார்.
இதனைத் தொடர்ந்து அவர்களின் உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்திலும் குறித்த செய்தி போலியானது என பதிவிட்டதும் எமக்கு கிடைக்கப்பெற்றது.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், ஜனாதிபதி தேர்தல் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட கருத்துக் கணிப்பு என்று பரவும் தகவல் போலியானது, என கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
இது தொடர்பாக எமது ஆங்கில பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:ஜனாதிபதி தேர்தல் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கருத்துக் கணிப்பு வெளியிட்டதா?
Written By: S G PrabuResult: False


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team