
INTRO :
நாட்டை விட்டு தப்பிச்சென்ற கோட்டபாய ராஜபக்ச விமான விபத்தில் மரணம் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ” விமான விபத்தில் இலங்கை அதிபர் திடீர் மரணம் “ என இம் மாதம் 14 ஆம் திகதி (14.07.2022) யூடியுப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
விமான விபத்தில் கோட்டபாய ராஜபக்ஷ மரணம் என வெளியாகியுள்ள வீடியோவின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக ஆய்வினை மேற்கொண்டோம்.
இலங்கை நாட்டை விட்டு நேற்று அதிகாலை (13.07.2022) விமானப்படையின் விமானத்தின் மூலம் மாலைத்தீவிற்கு சென்றடைந்தனர்.
இதற்கு இலங்கை விமானப்படை விமானத்தினை வழங்கியமைக்கான காரணத்துடன் அவர்கள் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கை

அங்கிருந்து இன்று (14.07.2022) பிற்பகல் சவுதி அரேபியன் எயார்லைன்ஸ் ஊடாக சிங்கப்பூர் நோக்கி பயணத்து அங்கு சென்றடைந்தார்.
சிங்கப்பூர் நாட்டிற்கு தனிப்பட்ட விஜயத்தினை கோட்டபாய ராஜபக்ஷ வந்துள்ளதாகவும் அவருக்கு அங்கு புகலிடம் வழங்கவில்லை எனவும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய விமான விபத்தில் கோட்டபாய ராஜபக்ஷ மரணம் என பகிரப்படும் செய்தி போலியானது என உறுதி செய்யப்படுகிறது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team