
INTRO :
வெயில் காரணமாக பெட்ரோல் டேங்க் முழுவதும் நிரப்ப வேண்டாம் என இந்தியன் ஆயில் எச்சரித்தது என செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் “இந்தியன் ஆயில்
இந்தியன் ஆயில் எச்சரிக்கிறது
வரும் நாட்களில் வெப்பநிலை உயரும் என்பதால், அதிகபட்ச வரம்பிற்குள் உங்கள் வாகனத்தில் பெட்ரோலை நிரப்ப வேண்டாம். இது எரிபொருள் தொட்டியில் வெடிப்பை ஏற்படுத்தும். தயவு செய்து உங்கள் வாகனத்தில் பாதி எரிபொருளை நிரப்பி, காற்று வருவதற்கு இடமளிக்கவும். இந்த வாரம் அதிகபட்சமாக பெட்ரோல் நிரப்பியதால் 5 வெடி விபத்துகள் நடந்துள்ளன.
தயவு செய்து பெட்ரோல் டேங்கை ஒரு நாளைக்கு ஒரு முறை திறந்து உள்ளே உள்ள வாயுவை வெளியே வர விடுங்கள்.
குறிப்பு: இந்தச் செய்தியை உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்ற அனைவருக்கும் அனுப்பவும், இதனால் மக்கள் இந்த விபத்தைத் தவிர்க்கலாம். நன்றி “ என இம் மாதம் 20 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு (20.04.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டபோது, 2019 ஆம் ஆண்டு முதல் குறித்த வதந்தி பரவி வருவதாகவும், இந்தியன் ஆயில் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் கண்டறிந்தனர்.
குறித்த டுவிட் பதிவை அவர்கள் மீண்டும் சமீபத்தில் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது. அதனை அவர்களின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ”பின்” செய்து வைத்துள்ளமை காணக்கிடைத்தது.
அதில் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்ற குறித்த தகவலுக்கு பதிலளித்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனம், தானியங்கி வாகனத் தயாரிப்பாளர்கள் தேவைகள், தட்ப வெப்பநிலை, பாதுகாப்பு அம்சம் எனப் பல விஷயங்களை ஆய்வு செய்துதான் வாகனத்தை வெளியிடுகின்றனர். வாகனத்தின் டேங்க்கை மட்டும் விதிவிலக்காகப் பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டுத் தயாரிக்காமல் விட்டிருக்க மாட்டார்கள். எனவே, வெயிலோ, குளிரோ வாகனத்தின் முழு டேங்கையும் நிரப்புவது பாதுகாப்பானதுதான் ” என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் வெயில் காரணமாக பெட்ரோல் டேங்க் முழுவதும் நிரப்ப வேண்டாம் என இந்தியன் ஆயில் எச்சரித்துள்ளது என்று பரவும் தகவல்கள் போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:வெயில் காரணமாக பெட்ரோல் டேங்க் முழுவதும் நிரப்ப வேண்டாம் என இந்தியன் ஆயில் எச்சரித்ததா?
Fact Check By: S G PrabuResult: False

Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team