
INTRO :
மிரிஹான பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் உரையாடிய இளைஞன் மரணமடைந்து விட்டதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ” நம் அனைவரின் சார்பாகவும், மிரிஹானாவில் உள்ள பொலிஸாரிடம் உரையாடிய ஒரு உண்மையான நாயகனைப் பற்றிய செய்தியைக் கேட்டு நான் வருந்துகிறேன். பலத்த காயம் காரணமாக அவர் இன்று மாலை காலமானார். அவரது உடல் இன்னும் மீட்கப்படவில்லை, அவரது மரணம் நாட்டில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தவில்லை, அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் அவரது ஆன்மா சாந்தியடையட்டும் தயவு செய்து ஒரு அப்பாவி ஆன்மாவிற்கு இழைக்கப்பட்ட அநீதியை மக்களுக்கு உணர்த்துங்கள்.. “ என இம் மாதம் 04 ஆம் திகதி (04.04.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
நமது குழுவினர் இது தொடர்பாக ஆய்வினை மேற்கொண்ட போது, குறித்த ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்து அவர் கொழும்பு தெற்கு களுபோவில போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை உறுதிசெய்யப்பட்டது.
இது தொடர்பாக ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி களுபோவில வைத்தியசாலையினை தொடர்புக்கொண்டு வினவியபோது, குறித்த மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட யாரும் உயிரிழக்கவில்லை என எமக்கு உறுதி செய்து இருந்தனர்.
குறித்த இளைஞன் இறந்து விட்டதாக வெளியான செய்தி போலியானது என பொலிஸ் ஊடக அறிக்கையினையும் வெளியிட்டிருந்தமை காணக்கிடைத்தது.
குறித்த இளைஞன் இரு தினங்களுக்கு முன்னர் (12.04.2022) அபே சிங்கள பந்திய என்ற யூடியுப் பக்கத்திற்கு வழங்கிய நேர்காணலில் அன்று என்று நடந்தது என்று தெளிவாக விளக்கியுள்ளமையும் காணக்கிடைத்தது.
எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், மிரிஹானவில் பேசிய இளைஞன் மரணம் பரவும் செய்தி போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team