INTRO :
இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தி இந்து பத்திரிக்கையின் செய்தியாளருக்கு பணம் கொடுத்து விடுதலை புலிகள் மீண்டும் இலங்கையினை தாக்க உள்ளதாக தி இந்து இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டதாக NDTV இணையத்தில் வெளியான செய்தி என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” மூதேவி... இந்த பிழைப்பு பிழைக்கிறதுக்கு நீ சாவலாம்... “ என இம் மாதம் 15 ஆம் திகதி (15.05.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் முதலில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ( 2009 இல் இலங்கையில் 30 வருடங்களுக்கு மேல் இடம்பெற்ற உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த நாள் ) முன்னிட்டு மே 18 ஆம் திகதி அன்று இலங்கையின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தலாம் என்று “தி இந்து” வெளியிட்ட செய்தியில் உளவுத்துறை அமைப்பின் எச்சரிக்கையின் அடிப்படையில் குறித்த செய்தி வெளியாகி இருந்தமை காணக்கிடைத்தது.

The Hindu | Archived

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு சனிக்கிழமையன்று (14.05.2022), இலங்கையில் "தாக்குதல்களைத் தொடங்குவதற்கு முன்னாள் புலிகள் மீண்டும் குழுமியிருக்கிறார்கள்" என்ற செய்தியினை மறுத்துள்ளது என்று இந்திய உளவுத்துறையின் ஆதாரங்களை மேற்கோள்காட்டி தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. இதைப் பற்றிய “தி இந்து” கட்டுரை இதோ.

News.lk | Archived

மேலும் நாம் இணையத்தில் பரவுகின்ற புகைப்படத்திற்கு அமைய முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அனுசரணையுடன் “தி இந்து” நிருபரின் அத்தகைய கட்டுரை வெளியிடப்பட்டதா என்று NDTV இணையத்தில் உலகச் செய்தி பிரிவில் தேடினோம். NDTV இணைய செய்தி பதிப்பில் வெளியிடப்பட்ட அத்தகைய செய்தியினை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.


முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவரின் அதே புகைப்படத்தினை பயன்படுத்தி NDTV இணையத்தில் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 17 பேருக்கு நாட்டை விட்டு வெளியேற தடைவிதித்து நீதிமன்ற வெளியிட்ட அறிக்கை தொடர்பாக ஒரு செய்தி வெளியாகியிருந்தமை காணக்கிடைத்தது. link

நாம் NDTV இணையத்தினை ஆய்வு செய்த போது அவர்களின் இணைய செய்தி தலைப்பில் பயன்படுத்தியுள்ள எழுத்து வடிவமைப்புக்கும் இணையத்தில் பரவுகின்ற புகைப்படத்தில் உள்ள எழுத்து வடிவமைப்பும் வித்தியாசமாக இருந்தமை அவதானிக்க முடிந்தது.

மேலும் குறித்த செய்தி போலியானது என NDTV முன்னாள் CEO சுபர்ணா சிங் டுவிட் பதிவும் இட்டுள்ளமை காணக்கிடைத்தது.

இதன் அடிப்படையில், மஹிந்த ராஜபக்ஷ தி இந்து செய்தியாளருக்கு பணம் வழங்கி செய்தி வெளியிட்டதாக NDTV வெளியிட்ட செய்தி என பகிரப்படும் புகைப்படம் போலியானது என உறுதி செய்யப்படுகிறது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:மஹிந்த ராஜபக்ஷ தி இந்து செய்தியாளருக்கு பணம் வழங்கி செய்தி வெளியிட்டதாக NDTV வெளியிட்ட செய்தி உண்மையா?

Fact Check By: S G Prabu

Result: Altered