INTRO :
கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை முடிவுகள் இம்மாதம் 5 ஆம் திகதி (05.10.2022) வெளிவருகின்றதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ” க.பொ.த பொதுத் தேர்வு முடிவுகள் G.C.E O/L தேர்வு முடிவுகள் இலங்கை இன்று(28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் பொதுப் பரீட்வை பெறுபேறுபள் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.“ என குறித்த செய்தி பரவி வருகின்றது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் முதலில் குறித்த பதிவை அவதானித்த போது, அதில் உள்ள எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருந்தமை காணக்கிடைத்தது. அதற்கமைய குறித்த செய்தி போலியாக வடிவமைக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழவே நாம் ஆய்வினை மேற்கொண்டோம்.

இதன் உண்மைத்தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக நாம் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினை தொடர்புக்கொண்டு வினவிய போது, இது முற்றிலும் போலியான தகவல் என்று எமக்கு உறுதி செய்தனர்.

மேலும் நாம் இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதா என ஆய்வு செய்த போது அவ்வாறான செய்தி எதுவும் வெளியாகி இருக்கவில்லை.

இதற்கமைய க.பொ.த சாதாரண தர முடிவுகள் ஒக்டோபர் 5 ஆம் திகதி வெளியாகும் என பகிரப்பட்ட தகவல் போலியானது என்று கண்டறியப்பட்டது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:க.பொ.த சாதாரண தர முடிவுகள் ஒக்டோபர் 5 ஆம் திகதி வெளிவருகின்றதா ?

Fact Check By: S G Prabu

Result: False