
INTRO :
இஸ்லாமிய பெண்கள் துபாய் மசூதியில் ராம் பஜனை பாடுகின்றனர் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் “👆 *துபாயில் ஒரு புதிய சகாப்தம்… இஸ்லாமிய பெண்கள் மசூதியில் ராம் பஜனை செய்கிறார்கள், அவர்களின் கணவர்கள் ஷேக்குகள் ஆதரவாக கைதட்டுகிறார்கள்*.
இந்த மகிழ்ச்சியான விஷயத்தை நமது 135 கோடி இந்தியர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்….👏 *ஜெய் ஸ்ரீராம்*👏
THEY ARE ORIGINAL MUSLIMS “ என கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு (19.01.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்ட போது,
முதலில் குறித்த வீடியோவில் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, 2012 ஆம் ஆண்டு காலத்தில் இருந்து இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்து.

theprasanthireporter.org I Archive
புட்டபர்த்தி சத்திய சாய் அமைப்பின் தி பிரஷாந்தி ரிப்போர்ட்டர் என்ற இணைய தளத்தில் 2012 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி வெளியாகியிருந்த செய்தியின் அடிப்படையில், மத்திய கிழக்கு நாடுகளான பக்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சௌதி அரேபியா, சிரியா, துருக்கி மற்றும் யுஏஇ பகுதிகளில் உள்ள 94 சாய் அமைப்பைச் சேர்ந்தவர்கள் புட்டபர்த்திக்கு புனித பயணம் மேற்கொண்டனர்.
அவர்கள் பக்தர்களுடன் இணைந்து பஜனையில் ஈடுபட்டனர். ஆறு அரபி பாடல்களும் அதைத் தொடர்ந்து பஜனையும் நடந்தது” என்று குறிப்பிட்டிருந்தனர்.
இது குறித்து நாம் யூடியுப் தளத்தில் தேடிய போது,
Sri Sathya Sai Official என்ற யூடியுப் அலைவரிசையில் SARVA DHARMA SWAROOPA SAI என்ற தலைப்பிட்டு பதியப்பட்டிருந்த வீடியோ கிடைக்கப்பெற்றது.
குறித்த வீடியோவை நாம் நன்கு ஆராய்ந்த போது, அதில் தற்போது இணையத்தில் வைரலாகும் வீடியோவும் காணக்கிடைத்தது. மேலும் இவர்கள் இஸ்லாமியர்கள் என்றோ, இந்துக்கள் என்றோ எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.
அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சி துபாயில் உள்ள ஒரு மசூதியில் நடந்தது இல்லை, இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள புட்டபர்த்தியில் நடந்தது என்பது உறுதியானது.
நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி, துபாய் மசூதியில் ராம் பஜனை என பரவும் வீடியோ புட்டபர்த்தியில் எடுக்கப்பட்ட வீடியோ என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team