ஒரு மாதத்தில் நாட்டின் எரிபொருள் பிரச்னைக்கு தீர்வு தருவதாக சஜித் தெரிவித்தாரா?
INTRO :
பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துங்கள், ஒரு மாதத்தில் நாட்டின் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு தருகிறேன் என சஜித் பிரேமதாச தெரிவித்ததாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் ” பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்தங்கள் ஒரு மாதத்தில் நாட்டின் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு தருகிறேன் Sajith Premadasa
ஒருவேளை பேரணியின் போது யாராவது தலையில் அடித்தார்களோ..!??? “ என இம் மாதம் 05ஆம் திகதி (05 .04.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நமது குழுவினர் இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் ஊடக பேச்சாளரை தொடர்பு கொண்டு பேசிய போது, அவ்வாறான கருத்தினை அவர் எங்கும் முன்மொழியவில்லை என தெரிவித்ததோடு, குறித்த தகவல் முற்றிலும் போலியானது எனவும் தெரிவித்தார்.
மேலும், நாம் சஜித் பிரேமதாச உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் கடந்த 3 ஆம் திகதி (03.04.2022) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, பாராளுமன்றத்தினை கலைத்து தேர்தலை நடத்துங்கள், ஒரு மாதத்தில் நாட்டின் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு தருகிறேன், என தெரிவித்திருக்கவில்லை.
அதில் சர்வ கட்சி பாராளுமன்றத்திற்கு தாங்கள் ஆதரவினை வழங்கபோவதில்லை எனவும், மக்கள் வரத்தினால் மட்டுமே நாம் ஆட்சிக்கு வருவோம் எனவும் தெரிவத்திருந்தமை காணக்கிடைத்தது.
அதன்படி, பேரணியினை முன்வைத்து பேரணியிற்கு பின்னர் பரப்பப்படும் குறித்த தகவல் போலியானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 6 ஆம் திகதி (06.03.2022) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்துடன் இணைந்து ஐக்கிய அரபு நாடுகள் 2 வருடத்திற்கு கடனுதவியுடன் எரிப்பொருள் வழங்குவதற்கு தயாராக உள்ளதாக அவர் கருத்து வெளியிட்டிருந்தமையும் காணக்கிடைத்தது.
இதன் அடிப்படையில், ஒரு மாதத்தில் நாட்டின் எரிபொருள் பிரச்னைக்கு தீர்வு தருவதாக சஜித் தெரிவித்ததாக வெளியான தகவல் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Title:ஒரு மாதத்தில் நாட்டின் எரிபொருள் பிரச்னைக்கு தீர்வு தருவதாக சஜித் தெரிவித்தாரா?
Fact Check By: S G PrabuResult: False