ஒலுவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு 2024 ம் ஆண்டு படகு சேவையா ?
INTRO :
ஒலுவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு 2024 ம் ஆண்டு படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஒரு புகைப்படம் தொகுப்பு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் ” ஒலுவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு 2024 ம் ஆண்டு படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது “ என இம் மாதம் 02 ஆம் திகதி 2024ஆம் ஆண்டு (02.01.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் முதலில் குறித்த புகைப்படத்தை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, இது 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டது.
மேலும் குறித்த மேற்கொண்ட ஆய்வின் போது, தென்கிழக்கு பல்கலைக்கழகம் வெள்ளத்தினால் மூடப்பட்டதாக பரப்படும் தகவல் போலியானது என அவர்களின் பேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், ஒலுவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு 2024 ம் ஆண்டு படகு சேவை என பகிரப்படும் புகைப்படம் தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Title:ஒலுவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு 2024 ம் ஆண்டு படகு சேவையா ?
Written By: S G PrabuResult: Misleading