INTRO :
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மொபைல் போனை சிற்பமாக செதுக்கிய தமிழன் என சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” கல்லையே காப்பாக வளைத்தவர்கள் நம் முன்னோர்கள் .

இவற்றை முன்கூட்டியே அறிந்து செயற்படும் ஞானமோ வர்ணிக்கப்பட்ட வார்த்தைகள் அற்றவை!! “ என ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி (12.04.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் குறித்த புகைப்படத்தினை முதலில் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்தோம்.

அப்போது இது குஜராத் மாநிலத்தில் பவநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சமணக் கோவிலான பாலிதானா கோவில் என்று தெரியவந்தது. அந்த கோவிலில் இந்த சிற்பம் இருப்பதாக shunya.net என்ற இணையதளத்தில் புகைப்படம் வெளியாகி இருந்தது. இந்த இணையதளம் வெளியிட்ட புகைப்படத்தை எடுத்து பகிர்ந்திருப்பது தெரிந்தது.

shunya.net I Archive

இது குறித்து மேலும் தேடிய போது, புகைப்படங்களை விற்பனை செய்யும் இணையத்தளமான alamy.com இணையத்தளத்தில் குறித்த புகைப்படம் விற்பனைக்கு இருந்தது. அதில் தொலைபேசி பேசும் பெண் உருவச்சிலை என பகிரப்பட்ட புகைப்படமானது, குறித்த பெண் கண்ணுக்கு மையிட்டு தன்னை அழகுபடுத்தி கொள்ளும் விதமாகவும் மற்றைய பெண் கடிதம் எழுதுவதை போன்றே வடிவமைத்துள்ளமை நன்கு அறிய முடிகின்றது.

alamy.comI Archive

நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், மொபைல் போன் பயன்படுத்தும் பெண்கள் என சிற்பம் வடிக்கப்படவில்லை. பெண்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ளும் காட்சி என்றும் கடிதம் எழுதும் காட்சி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மொபைல் போனை சிற்பமாக செதுக்கிய தமிழன்- உண்மையா?

Fact Check By: S G Prabu

Result: False