கண்டி மடவலையில் தற்போது பதற்றமா ?

இலங்கை | Sri Lanka சமூக ஊடகம்


INTRO :

கண்டி மடவலை பிரதேசத்தில் தற்போது பதற்றம் என ஒரு செய்தி புகைப்படத்தொகுப்புடன் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் “தற்போது கண்டி மடவளையில் பதட்டம் “ என இம் மாதம் 19 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (19.04.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இது தொடர்பாக எமது குழுவினர் வத்தேகம பொலிஸ் நிலையத்தினை தொடர்புக்கொண்டு வினவிய போது, அவ்வாறான எவ்விதமான சம்பவங்களும் இடம்பெறவில்லை எனவும், ரமழான் பண்டிகையினை முன்னிட்டு பள்ளிவாசல்களுக்கு விஷேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அக்குறணை அலவத்துகொட பள்ளிவாசல் ஒன்றில் வெடிகுண்டு வெடிக்கும் அபாயம்  காணப்பட்டதாக பொலிஸாருக்கு நேற்றிரவு (18)  கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த பிரதேசத்தின் பாதுகாப்பை பொலிஸார் ஸ்திரப்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் குறித்த புகைப்படங்களானது, கடந்த வருடம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என பலர் குறித்த பதிவின் கீழ் பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

அத்துடன் குறித்த இடத்தின் நேரலை புகைப்படத்தினையும் அதில் பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

மேலும் நாம் மேற்கொண்டு ஆய்வின் மூலம் குறித்த படம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி (2022.04.19) பேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்தமை எம்மால் கண்டறியப்பட்டது. குறித்த காலக்கட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி எதிராக நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த போராட்டமும் அக்காலத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Facebook Link | Archived Link

குறித்த பதிவினை இட்ட நபரே இது பொய்யான தகவல் என்று இதற்கு முன்னர் பதிவிட்டிருந்த பதிவினை தற்போது நீக்கியுள்ளமை காணக்கிடைத்தது.

Facebook Link | Archived Link

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் கண்டி மடவலையில் தற்போது பதற்றம் என்று பகிரப்பட்ட செய்தி போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion: முடிவு


எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:கண்டி மடவலையில் தற்போது பதற்றமா ?

Fact Check By: S.G.Prabu 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *