மொரோக்கோ பூமி அதிர்வு; தெருவில் உறங்கும் மக்கள் என பரவும் வீடியோ உண்மையா?

False சமூக ஊடகம் சர்வதேசம் | International

INTRO :

மொரோக்கோ பூமி அதிர்வில் தமது சொத்துக்களை இழந்த மக்கள் தெருவில் உறங்கும் வீடியோ என ஒரு வீடியோ  சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link 

சமூகவலைத்தளங்களில் “மொரோக்கோ பூமி அதிர்வினால் வீடு வாசல் சொத்து செல்வம் என்று அனைத்தையும் இழந்து வெரும் கையுடன் தெருவில் உறங்கும் மொரோக்கோ மக்கள்.

இதுதான் யதார்த்தம் இதைப் புரிந்து கொண்டால் இந்த உலகில் வாழும் காலத்தில் தன்னடக்கத்துடன் வாழுவார்கள் மமதையில் ஆட மாட்டார்கள்.

இந்த இடத்தில் பணம் படைத்த செல்வந்தர்கள் அதிகாரம் படைத்த அரசியல்வாதிகள் வைத்தியர்கள் வல்லுநர்கள்

ஏழை பணக்காரன் மேல்ஜாதி கீழ்ஜாதி நல்லவன் கெட்டவன் என்று எந்தப் பாகுபாடும் இல்லை “ என கடந்த இம்மாதம் 15 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (15.09.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

கடந்த 8 ஆம் திகதி (08.09.2023) மொரோக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக 3000 பேர் உயிரிழந்ததோடு பலர் வீடுகளை இழந்து நிர்கதியாகினர்.  அவர்கள் தற்காலிகக் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். www.aljazeera.com

இதனைத் தொடர்ந்து குறித்த சம்பவத்தில் தமது வீடுகளை இழந்தவர்கள் வீதியில் உறங்குவதாக தெரிவித்து ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

இது தொடர்பாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்ட போது, 

நாம் முதலில் குறித்த வீடியோவில் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது,

கடந்த மாதம் 6 ஆம் திகதி (06.08.2023) அன்று “Solo Catecumenos” என்ற யூடியுப் அலைவரிசையில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Youtube link  | Instagram link 

குறித்த வீடியோவில் உள்ள தகவலுக்கமைய இது இவ்வருடம் போர்த்துக்கள் நாட்டில் லிஸ்பனில் நடைப்பெற்ற கத்தோலிக்க சர்வதேச இளைஞர் நாள்  (JMJ2023) என கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக வெளியான ஊடகச் செய்திகளில் சுமார் 1.5 மில்லியன் மக்கள் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. france24.com

நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி, மொரோக்கோ பூமி அதிர்வு; தெருவில் உறங்கும் மக்கள் என பகிரப்படும் வீடியோ போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion: முடிவு


எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:மொரோக்கோ பூமி அதிர்வு; தெருவில் உறங்கும் மக்கள் என பரவும் வீடியோ உண்மையா?

Written By: S.G.Prabu 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *