புதிய ஜனாதிபதி தெரிவு; மாவட்ட தலைவர்களை நியமித்ததா ஐக்கிய தேசிய கட்சி ?

இலங்கை | Sri Lanka

INTRO :
இலங்கையின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய பாராளுமன்ற அமைச்சர்களை வழிநடத்த புதிய மாவட்ட தலைவர்களை நியமித்த ஐக்கிய தேசிய கட்சி என ஒரு கடித  புகைப்படம் என சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” பாராளுமன்றத்தில் இடம் பெற்ற புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்தல் தொடர்பான வாக்கெடுப்பில் பாராளுமன்ற மந்திரிகளின் இணைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள்

* அம்பாந்தோட்டை – நாமல் ராஜபக்ச

இது எப்ப இருந்து..? 

UNP? Namal? අලි ඩීල්! “ என இம் மாதம் 18 ஆம் திகதி (18.07.2022)  பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்) 

ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்புடன் வழங்கப்பட்ட கடிதம் தொடர்பில், அதன் ஊடக ஒருங்கிணைப்பாளர்களிடம் விசாரணை மேற்கொண்டோம்.

இந்தக் கடிதம் ஐக்கிய தேசியக் கட்சியினால் வெளியிடப்படவில்லை எனவும், இது போலியான கடிதம் என தெரிவித்தார்.

மேலும் மேற்படி கடிதம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறித்த கடிதம் போலியானது என வெளியிட்டிருந்தனர்.

Facebook Link | Archived Link

எனினும் இதனை நாம் மேலும் உறுதிப்படுத்த அக்கடிதத்தில் மாவட்ட தலைவர்கள் என பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சில அமைச்சர்களை நாம் தொடர்புகொண்டு வினவினோம்.

தமக்கு அவ்வாறானதொரு கடிதம் கிடைக்கவில்லை எனவும் இது பொய்யான கடிதம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எமக்கு தெரிவித்தார். 

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களான கனக ஹேரத், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சரத் வீரசேகர ஆகியோரின் ஊடகப் பிரிவும், ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து அவ்வாறான கடிதமோ அல்லது அறிவிப்போ தமக்கு கிடைக்கவில்லை எனத் தெரிவித்தது.

நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய இலங்கையின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு பாராளுமன்ற அமைச்சர்களை வழிநடத்த புதிய மாவட்ட தலைவர்களை நியமித்த ஐக்கிய தேசிய கட்சி என பரவுகின்ற கடிதம் போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எமது சிங்கள பிரிவு மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:புதிய ஜனாதிபதி தெரிவு; மாவட்ட தலைவர்களை நியமித்ததா ஐக்கிய தேசிய கட்சி ?

Fact Check By: S G Prabu 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *