INTRO :
சீரற்ற காலநிலையினால் பூநொச்சிமுனை கடற்கரையில் மீன்கள் கரை ஒதுங்கியதாக ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):


Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” இலங்கை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை இன்னமும் மாற்றமடையாத நிலையில் அதிக காற்று மற்றும் தூசு கலந்த காற்றினால் பல பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில் பூநொச்சிமுனை கடற்கரையில் தாளமுக்கத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் மீன்கள் கரையொதிங்கியிருந்தன.

கரை ஒதுங்கிய மீன்களை உண்டால் விளைவுகள் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது. “ என இம் மாதம் 09 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு (09.12.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் முதலில் குறித்த புகைப்படத்தை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, இது பல வருடங்களாக பலராலும் பகிரப்பட்டு வருகின்ற புகைப்படம் என விளங்கியது.

அதன் முதற்பதிவினை நாம் தேடிய போது, அமெரிக்காவின் மெக்சிகனில் ரோஸ் பூங்காவிற்கு அருகாமையில் அமைந்துள்ள மோனா என்ற ஏரியில் குறித்த மீன்கள் ஒதுங்கியதாக Gerald Simmons என்பவரால் Flicker-ல் 2008 ஆம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

flickr.com

மேலும் கடந்த வருடத்தில் இலங்கை கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழுந்து கரையொதுங்கியுள்ளன என தெரிவித்து இதே புகைப்படம் பகிரப்பட்டிருந்தமை தொடர்பாக நாம் ஏற்கனவே ஆய்வினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் கரையொதுங்கிய மீன்கள் என பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

மேலும் இதனை உறுதி செய்ய நாம் அங்குள்ள ஊடகவியலாளர்கள் இருவரை தொடர்புக்கொண்டு வினவிய போது, அவ்வாறான எவ்விதமான சம்பவமும் பதிவாகவில்லை என எமக்கு உறுதி செய்தனர்.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், சீரற்ற காலநிலையினால் பூநொச்சிமுனை கடற்கரையில் மீன்கள் கரை ஒதுங்கியதாக பகிரப்படும் புகைப்படம் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok

Conclusion: முடிவு


எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:சீரற்ற காலநிலையால் பூநொச்சிமுனை கடற்கரையில் மீன்கள் கரை ஒதுங்கியதா?

Fact Check By: S.G.Prabu

Result: False