
INTRO :
திருகோணமலை துறைமுகம் மக்களால் முற்றுகை செய்யப்பட்டுள்ளதாக புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ” திருகோணமலை துறைமுகம் மக்களலால் முற்றுகை. “ என இம் மாதம் 10 ஆம் திகதி (10.05.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
திருகோணமலை துறைமுகம் மக்களால் முற்றுகை என பகிரப்படும் புகைப்படத்தின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக ஆய்வினை மேற்கொண்டோம்.
இலங்கையில் நேற்று (09.05.2022) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர் ஏற்பட்ட அமைதியின்மையின் நிமிர்த்தமாக பல அரசியல்வாதிகளில் வீடுகள் அவர்களுக்கு சொந்தமான கடைகள் என பல இடங்களுக்கு, பொதுமக்கள் தீ வைப்பதன் மூலமாக, தமது எதிர்ப்பினை காட்டியவாறு உள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை கொழும்பு அலரிமாளிகையில் இருந்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ திருகோணமலையில் அமைந்துள்ள கடற்படை முகாமிற்கு சென்றடைந்ததாக வெளியான செய்தியின் பின்னர் அங்குள்ள மக்கள் திருகோணமலை கடற்படை முகாமிற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த பிண்ணனியில் திருகோணமலை கடற்படை முகாமிலிருந்து சோபர் தீவிற்கு அவர்கள் சென்றதாக தகவல்கள் கசிந்தது. இதனை தொடர்ந்து இணையத்தில் திருகோணமலை துறைமுகத்தினை மக்கள் முற்றுகையிட்டுள்ளதாக சில புகைப்படங்கள் மற்றும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாக தொடங்கியது.
நாம் பகிரப்படும் புகைப்படங்களை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வுக்கு உட்படுத்தினோம்.
சீனாவில் அமைந்துள்ள Wenling, Zhejiang என்ற இடத்தில் கடந்த மாதம் 30 ஆம் திகதியன்று விடுமுறை நிமிர்த்தமாக தரித்து வைக்கப்பட்டிருந்த படகுகளின் புகைப்படம் என கண்டறியப்பட்டது.


குறித்த வீடியோ தொடர்பாக நாம் keywords இனை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது, இது கடந்த மார்ச் மாதம்
____thi_sa_ra____55 என்ற டிக்டொக் பயனாளி, அவரின் டிக்டொக் கணக்கில் பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.
இதற்கமைய பழைய வீடியோ, பழைய புகைப்படங்களை புதியது போன்று இன்றைய சம்பவத்துடன் தொடர்பு படுத்தி பகிர்ந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், திருகோணமலை துறைமுகம் மக்களால் முற்றுகை என பகிரப்படும் புகைப்படம் மற்றும் வீடியோ போலியானது என உறுதி செய்யப்படுகிறது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team