
INTRO :
புற்றுநோயால் மரணமடைந்த உலகப் புகழ்பெற்ற டிசைனர் என்று நடிகையின் படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் “உலகப்புகழ்பெற்ற டிசைனர்.( Crisda Rodriguez) சமீபத்தில் கேன்சரால் இறந்து போனார். அவர் கடைசியாக எழுதிய வார்த்தைகள்.
மரணத்தை விட உண்மையானது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. !
இந்த உலகத்தில் விலை உயர்ந்த பிராண்டட் கார் என்னுடைய கேரேஜில் நிற்கிறது. ஆனால் நான் சக்கரநாற்காலியில் அழைத்து செல்லப் படுகிறேன்.!
இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான டிசைன்களிலும் கலர் களிலும் விலை உயர்ந்த ஆடைகள் விலை உயர்ந்த காலணிகள் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளது. ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய சிறிய கவுனில் இருக்கிறேன்.!
என் வங்கி கணக்கில் ஏராளமான பணம் கிடக்கிறது ஆனால் எதுவும் எனக்குப் பயன் இல்லையே.!!
என் வீடு அரண்மனை போன்று கோட்டை போன்று உள்ளது ஆனால் நான் மருத்துவமனையில் ஒரு சிறு படுக்கையில் கிடக்கிறேன்.
இந்த உலகத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு நான் பயணித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் மருத்துவமனையில் உள்ள ஆய்வகங்களுக்கு மற்றொரு லேபிற்க்கும் மாற்றி மாற்றி அழைத்துச் செல்லப்படுகிறேன்.!
அன்று தினசரி 7 சிகை அலங்கார நிபுணர்கள் எனக்கு அலங்காரம் செய்வார்கள். ஆனால் இன்று என் தலையில் முடியே இல்லை…
உலகிலுள்ள பல வகையான உயர் நட்சத்திர ஓட்டல்கள் உணவுகளை உண்டு கொண்டிருந்தேன். ஆனால் இன்று பகலில் இரண்டு மாத்திரைகள் இரவில் ஒரு துளி உப்பு. !
தனியார் ஜெட்டில் உலகம் முழுவதும் பறந்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று மருத்துவமனை வராண்டாவிற்கு வருவதற்கு இரண்டு நபர்கள் உதவுகிறார்கள்….
எல்லா வசதி வாய்ப்புகளும் எனக்கு உதவவில்லை… எந்த விதத்திலும் ஆறுதல் தரவில்லை…ஆனால்
சில அன்பானவர்களின் முகங்களும்
அவர்களது தொழுதல்களும் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. !
இவ்வளவு தானுங்க வாழ்க்கை…
யாருக்கும் உதவாத…
வெறும் பணம் பதவி அதிகாரம் என்று இருக்கும் மனிதர்களை மதிப்பதை தவிருங்கள்….
நல்ல மனித நேயமுள்ள மனிதர்களை நேசியுங்கள். “ என இம் மாதம் 07 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு (07.05.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்ட போது,
சமூகவலைத்தளத்தில் பகிரப்படும் புகைப்படத்தினை நாம் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, குறித்த புகைப்படத்தில் உள்ளவர் சோனாலி பிந்த்ரே 2021 ஜூன் 6 ஆம் திகதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தது தெரிந்தது. சிகிச்சை பெற்ற போது, தற்போது தான் எப்படி இருக்கிறேன், இன்று நான் என்னை திரும்பிப் பார்க்கும் போது வலிமையைக் காண்கிறேன் என்று குறிப்பிட்டு பதிவிட்டிருப்பது தெரிந்தது.
உலகப் புகழ் பெற்ற வடிவமைப்பாளர் மரணத்தைத் தழுவுவதற்கு முன்பு எழுதிய வார்த்தைகள் என்று குறிப்பிட்டுவிட்டு, நடிகை சோனாலி பிந்த்ரேவின் படத்தை வைத்துள்ளனர். படத்தில் இருப்பவர் உலகப் புகழ் பெற்ற வடிவமைப்பாளரும் இல்லை, அவர் தற்போது புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டு நலமுடன் வாழ்கிறார்.

மேலும் சோனாலி பிந்த்ரே புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற போது 2018 ஆம் ஆண்டு இந்த புகைப்படம் ஊடகங்களில் வெளியாகி இருப்பதும் காணக்கிடைத்தது.
indiaglitz.com | tribuneindia.com | india.com
மேலும் இதே பதிவினை வைத்து இன்னுமொரு பெண்ணின் புகைப்படத்தினை பகிர்ந்திருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

இது தொடர்பாக நாம் இதற்கு முன்பே உண்மை கண்டறியும் சோதனையினை மேற்கொண்டு ஆய்வறிக்கையினை வெளியிட்டிருந்தோம். அதனை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
குறித்த ஆய்வின் படி மொட்டைத் தலையுடன் இருக்கும் பெண் Nicole Schweppe என்றும், அமெரிக்காவைச் சார்ந்த கிராபிக் டிசைனர் என்பதும், மார்பக புற்றுநோய் பாதிப்பு காரணமாக கீமோ தெரப்பி சிகிச்சைக்கு தயாரான போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்றும் தெரிந்தது. இதை அவர் தன்னுடைய பிளாகில் பதிவிட்டிருந்தார். ஓராண்டுக்குப் பிறகு நோயில் இருந்து விடுதலை பெற்ற பிறகு என்று குடும்ப படத்தையும் அவர் பதிவிட்டிருந்தார்.
நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி, Kyrzayda Rodriguez என்பவர் 2018 ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார் என்பதும், அவர் மரணமடைவதற்கு முன்பு இருப்பதை வைத்து நிம்மதியாக சந்தோஷமாக வாழுங்கள் என்று பேசியதும் உண்மை என்று உறுதியானது.
ஆனால், Kyrzayda Rodriguez என்று குறிப்பிட்டு பிரபல நடிகை சோனாலி பிந்த்ரே படத்தைத் தவறாக வைத்துப் பகிர்ந்திருப்பதன் மூலம் சிறிது உண்மையுடன் தவறான பல தகவல் மற்றும் படத்தை பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:புற்றுநோயால் மரணமடைந்த உலகப் புகழ்பெற்ற டிசைனர் என பரவும் நடிகையின் படம்…
Fact Check By: S.G.PrabuResult: False


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team