INTRO :
'மஹமேரு புஷ்பம் ' அல்லது ஆர்யா பூ என்று அழைக்கப்படும் 400 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் பூ என சமூக வலைத்தளங்கள் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” இந்த பூ ஆர்யா என்று அழைக்கப்படும். இது 400 வருடத்திற்கு ஒருமுறை பூக்கும். இப்பூவை இன்னொரு தடவை நாங்கள் பார்க்கவேண்டு மென்றால் இன்னும் 400 வருடம் காத்திருக்க வேண்டும். “ என கடந்த வருடம் நவம்பர் மாதம் 01 ஆம் திகதி (01.11.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

நாம் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜ் பயன்படுத்தி ஆய்வுக்கு உட்படுத்திய போது, இது king protea என்ற பூ என கண்டறியப்பட்டது.

sanbi.org I Archive

இதனை Protea cynaroides என்ற விஞ்ஞான பெயரினால் அழைக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

wikipedia.org

இது தென்னாபிரிக்க நாடுகளில் காணப்படும் பூ வகையாகும். இது ஒவ்வொரு வருடமும் பூக்கும் பூ என்பது ஆய்வின் முடிவில் எம்மால் கண்டறியப்பட்டது.

mauifloral.com I Archive

குறித்த பூவினை வளர்த்து அதில் பூ மலர்ந்துள்ள வீடியோ பதிவும் எமக்கு கிடைக்கப்பெற்றது.

எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், 400 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் மஹமேரு புஷ்பம் என பகிரப்படும் தகவல் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:400 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் மஹமேரு புஷ்பமா இது?

Fact Check By: S G Prabu

Result: False