கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே புதிய இணக்கம் மேற்கொள்ளப்பட்டதா?
INTRO :
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான கச்சத்தீவு தொடர்பாக புதிய உடன்படிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் புதிய இணக்கம் !
👇👇
https://www.elukathir.lk/NewsMain.php?san=55254 “ என கடந்த மாதம் 28 ஆம் திகதி (28.06.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் முதலில் இது குறித்தான ஆய்வினை மேற்கொண்டபோது, 1974ஆம் ஆண்டு கச்சத்தீவு உடன்படிக்கை ஜூன் மாதம் 26 - 28ஆம் திகதிகளில் செய்து கொள்ளப்பட்டு, 50 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலே தற்போது இந்த தகவல் இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது.
இந்திய மற்றும் இலங்கை கடல் எல்லை பிரச்சினைக்கு காரணமான கச்சத்தீவு தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் எந்தவித இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை என ஹிரு செய்தி நிறுவனத்திற்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்திய ஊடகங்களில் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான எல்லை பிரச்சினைக்கு புதிய இணக்கம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகிய செய்திகள் தொடர்பாக வினவிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் இரண்டு நாடுகளுக்கும் எந்தவித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே புதிய இணக்கம் ஏற்பட்டதாக, பரவிய தகவல் தவறானது என்று கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Title:கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே புதிய இணக்கம் மேற்கொள்ளப்பட்டதா?
Written By: S G PrabuResult: False