சமீபத்தில் இலங்கையில் பிறந்த ஆறு குழந்தைகள் என பரவும் புகைப்படம் உண்மையா?

இலங்கை | Sri Lanka சமூக ஊடகம்

INTRO :

சமீபத்தில் இலங்கையில் பிறந்த ஆறு குழந்தைகள் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link 

சமூகவலைத்தளங்களில் பெண் ஒருவருக்கு 6 ஆண் குழந்தைகள்!

ராகம பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கொழும்பு காசல் வீதி பெண்கள் மருத்துவமனையில் ஆறு ஆண் குழந்தைகளை ஈன்றெடுத்துள்ளார்.

இதற்கு முன்னரும் இதுபோன்ற மற்றுமோர் பதிவு 2021 ஒக்டோபர் 21 லும் இடம்பெற்றிருந்தது.

நன்றி: ரூபவாஹினி

17.10.2023 “ என இம் மாதம் 17 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  ( 17.10.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

மேலும் உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இது தொடர்பாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்ட போது, 

நாம் முதலில் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவில் Danbury வைத்தியாசாலையில் பிறந்த குழந்தைகளின் புகைப்படம் என கண்டறியப்பட்டது.

pixsy

மேலும் நாம் மேற்கொண்ட தேடலின் போது, இந்த புகைப்படம் ஒரு திரைப்பட புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்டது, மேலும் அவர் புகைப்படத்தின் 2 வது வரிசையில் இடது மூலையில் தனது மகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த குழந்தைகள் இரட்டைக் குழந்தைகள் அல்ல என்றும், பல தாய்மார்களின் குழந்தைகள் என்றும், குறித்த புகைப்படம் மருத்துவர்களிடமும் தாய்மார்களின் அனுமதியோடும் எடுக்கப்பட்டது என தெரவித்துள்ளார்.

நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி சமீபத்தில் இலங்கையில் பிறந்த ஆறு குழந்தைகள் என பரவும் புகைப்படம் தவறானது என கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:சமீபத்தில் இலங்கையில் பிறந்த ஆறு குழந்தைகள் என பரவும் புகைப்படம் உண்மையா?

Written By: S G Prabu 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *