
INTRO :
இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை , பெலிஹுல் ஓயா பகுதியில் அமைந்துள்ள பஹன் துடாவ நீர்வீழ்ச்சியை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஆபாச வீடியோவில் தோன்றிய ஜோடி என புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Thayagam Media என்ற பேஸ்புக் கணக்கில் “ இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை , பெலிஹுல் ஓயா பகுதியில் அமைந்துள்ள பஹன் துடாவநீர் வீழ்ச்சியை பின்னணியாகக் கொண்டு, அதன் அருகே ஆபாச காணொளியை தயார் செய்து இணையத்தில்பதிவேற்றிய சம்பவத்தில், குறித்த ஆபாசக் காட்சிகளில் தோன்றிய இளைஞன் மற்றும் யுவதி கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி.யின் கணினி குற்றவிசாரணைப் பிரிவின் சிறப்புக் குழு அவர்களை இன்று மாலை கைது செய்தனர். மஹரகம பகுதியைச் சேர்ந்த 34 வயதான நபர் ஒருவரும் எல்பிட்டியவை சேர்ந்த தற்போதுபன்னிப்பிட்டிய பகுதியில் தற்காலிகமாக வசிக்கும் 25 வயதுடைய யுவதியுமே இவ்வாறு கைது…
https://thayagam24.com/%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%be%e0%ae…/ “ என இம் மாதம் 03 ஆம் திகதி (03.09.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இதனை பலரும் உண்மை என நினைத்து பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
நாம் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜ் பயன்படுத்தி ஆய்வு செய்த போது, இணையத்தில் பகிரப்பட்ட பெண்ணின் குறித்த நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ளவாறு எடுக்கப்பட்ட புகைப்படம் எமக்கு கிடைக்கப்பெற்றது. பார்வையிட
தொடர்ந்து இந்த புகைப்படத்தினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, குறித்த பெண்ணின் இன்ஸ்டெகிராம் பக்கமும் அதில் அவரின் கணவருடன் இருக்கும் பல புகைப்படங்களும் எமக்கு கிடைக்கப் பெற்றன. மேலும் குறித்த யுவதியின் கணவரின் இன்ஸ்டெகிராம் பக்கத்தினை நாம் ஆய்வுக்கு உட்படுத்திய போது, இணையத்தில் பகிரப்படும் புகைப்படத்தினை ஒத்த புகைப்படம் அவரின் கணக்கில் எமக்கு கிடைக்கப்பெற்றது.

மேலும் நாம் குறித்த பெண்ணின் கணவரை தொடர்புக்கொண்டு இது தொடர்பில் வினவிய போது, குறித்த புகைப்படத்தில் தானும் என்னுடைய மனைவியும் தான் இருப்பதாகவும், இணையவாசிகள் இதனை தவறாக புரிந்து கொண்டு இணையத்தில் பகிர்ந்து வருகின்றதாக தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக மீரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும், மின்னஞ்சல் வழியாக சிஐடியிடம் தான் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் அவர் எமக்கு தெரிவித்தார்.

மேலும் குறித்த ஜோடி இது தொடர்பாக ஒரு யூடியுப் தளத்திற்கு வழங்கிய நேர்காணலும் எமக்கு கிடைக்கப்பெற்றது.
நாம் மேற்கொண்ட தேடல் முடிவில் பலாங்கொடை ஆபாச வீடியோவில் இருக்கும் ஜோடி என பரவும் புகைப்படம் என பகிரப்பட்ட புகைப்படத்தில் உள்ளவர்கள் இதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல என்பது கண்டறியப்பட்டது.
எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:பலாங்கொடை ஆபாச வீடியோவில் இருக்கும் ஜோடி என பரவும் புகைப்படம் உண்மையா ?
Fact Check By: Nelson ManiResult: False