புதிய பயண வழிகாட்டுதலின் கீழ் தேசிய அடையாள அட்டை முறை இதுவா?

False இலங்கை | Sri Lanka

INTRO :
இலங்கையில் கொரோனா பரவுதல் அதிகரித்துள்ள நிலையில் புதிய பயண வழிகாட்டுதலின் கீழ் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படுள்ளமை தொடர்பில் ஒரு செய்தி, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

Carolina Hari என்ற பேஸ்புக் கணக்கில் ” நாளை (17) முதல் அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக தே.அ.அட்டை கடைசி இலக்கத்தை பயன்படுத்தி வீட்டை விட்டு வெளியேற முடியும். தே.அ.அ இல்லாதோர் சாரதி அனுமதிப் பத்திரம், பாஸ்போர்ட் பயன்படுத்தலாம். அதிலுள்ள தே.அ.அ கடைசி இலக்கமே கவனத்தில் கொள்ளப்படும்

நாளை அதிகாலை முதல் பயணக்கட்டுப்பாடு நீங்குகிறது: நாளை முதல் புதிய விதிமுறை!”  என இம் மாதம் 17 ஆம் திகதி  (17.05.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

Facebook Link | Archived Link 

Facebook Link | Archived Link 

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

இலங்கையில் நிலவுகின்ற கொரோனா பரவலை தொடர்ந்து வீட்டிலிருந்து வெளியே செல்ல ஒருவருக்கு மாத்திரம் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், அவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் இறுதி இலக்கத்தினை வைத்து அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதற்கமைய குறித்த தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறையானது பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள வேளையில் மாத்திரம் பயன்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தின் இறுதி இலக்கம் ஒற்றை இலக்கமாக (1, 3, 5, 7, 9) இருப்பின் அன்றைய நாளின் திகதியின் இலக்கம் ஒற்றை இலக்கமாகவும், அது இரட்டை இலக்கமாக (0, 2, 4, 6, 8) இருப்பின், இரட்டை இலக்கமுடைய திகதியிலும் வீட்டை விட்டு செல்ல முடியும்.

news.lkI Archived Link

எதிர்வரும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை (21.05.2021) இரவு 11 மணி முதல் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் முழு நேர போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படும். அதனையடுத்து 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

தொடர்ந்து அன்றிரவு (25 ஆம் திகதி இரவு) 11 மணிக்கு மீண்டும் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டு 28 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும். இதேவேளை இன்று திங்கட்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட இரவு நேர போக்குவரத்து கட்டுப்பாடு தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.

நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய புதிய பயண வழிகாட்டுதலின் கீழ் தேசிய அடையாள அட்டை முறை என இணையத்தில் பகிரப்படும் முறை தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:புதிய பயண வழிகாட்டுதலின் கீழ் தேசிய அடையாள அட்டை முறை இதுவா?

Fact Check By: Nelson Mani 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *