INTRO :

இந்திய ரயில்வே நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்ததாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் “ இனி வரும் காலங்களில் இது போன்ற ரயில் விபத்துகளை தடுப்பதற்கு ரயில்வே நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைப்பது தான் சிறந்த முடிவாகும் வானதி சீனிவாசன். #VanathiSrinivasan “ என இம் மாதம் 04 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு (04.06.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இது தொடர்பாக முதலில் எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வின் போது, வானதி சீனிவாசன் குறித்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்தியாவில் நிகழ்ந்த ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக, சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பகிரப்படுகிறது. அந்த வரிசையில் பகிரப்படும் வதந்திகளின் ஒன்றாகும்.

எமது இந்திய பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

ரயில்வே நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறினாரா?

நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி, இந்திய ரயில்வே நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என வானதி சீனிவாசன் கூறினார் என பகிரப்பட்ட தகவல் போலியானது என உறுதியாகின்றது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok

Conclusion: முடிவு


எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:இந்திய ரயில்வே நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என வானதி சீனிவாசன் கூறினாரா?

Written By: S.G.Prabu

Result: False