கொரோனா வைரஸிற்கு 1914 ஆம் ஆண்டே மருந்து இருந்ததா?

False இலங்கை | Sri Lanka

INTRO :
கொரோனாவிற்கான மாத்திரை என்று 1914 ஆம் ஆண்டு வெளியான புத்தகம் ஒன்றின் புகைப்பட பதிவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

Pathman Nishanthan என்ற பேஸ்புக் கணக்கில் ” கொரோன மாத்திரை”  என கடந்த மாதம் 30 ஆம் திகதி  (30.04.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது பலராலும் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்) 

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

இது தொடர்பாக இணையத்தில் நாம் ஆய்வினை மேற்கொண்ட போது, தினமணி நாளிதழில் இணையத்தளத்தில் வெளியாகி இருந்த ஒரு செய்தி இணைப்பும் எமக்கு கிடைக்கப்பெற்றது.

dinamani.com | Archived Link

குறித்த தினமனி இணையத்தளத்தில் இது ஆனால், போட்டோஷாப்பில் கோரோசன என்ற சொல்லை கோரோன என்று எடிட் செய்யப்பட்டிருக்கிறது.

எனவும் இதன் பிரதி யாரிடம் இருக்கிறதெனத் தெரியவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

இது குறித்து பேஸ்புக்கில் நாம் ஆய்வினை மேற்கொண்ட போது, அதன் உண்மையான பிரதி எமக்கு கிடைக்கப்பெற்றது.

மேலும் குறித்த விடயம் தொடர்பாக  ஏஷியா நெட் தமிழ் வெளியிட்டிருந்த செய்தியில், கோரோஜன என்ற பெயரை மாற்றி வெளியிட்டுள்ளார்கள். கோ என்றால் பசு. பசு மாட்டிலிருந்து எடுக்கப்படும் பொருளைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்து என்று பெயர். குழந்தைகளுக்கு சளிபிரச்னை சரியாக இந்த மருந்து அளிக்கப்படுகிறது. இதில் பூரம் என்ற மருந்து சேர்க்கப்படுகிறது. இது விஷத் தன்மை கொண்டது. சித்த மருத்துவர்கள் இதை பண்படுத்தி விஷத்தன்மை போக்கி மருந்து தயாரிப்பார்கள். இதை அப்படியே சாப்பிட்டால் மரணம் நிகழலாம்” என சித்த மருத்துவர் கூறியதாக குறிப்பிட்டிருந்தனர்.

asianetnews.com| Archived Link

 எமது இந்திய தமிழ் பிரிவினர் இது தொடர்பாக கடந்த வருடமே ஆய்வினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவர்கள் இது தொடர்பாக வேலூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவர் டாக்டர் விக்ரம் குமாரிடம் விசாரித்த போது, “இந்த தகவல் தவறானது. சமூக ஊடகங்களில் பகிரப்படும் அந்த மருத்துவக் குறிப்பில் பார்த்தீர்கள் என்றால் கோரோஜனை என்று ஒரு பொருளை கொடுத்திருப்பார்கள்.

அந்த கோரோஜனை என்பதை தமிழில் கோரோசனை என்று சொல்வார்கள். இதை போட்டோஷாப்பில் எடிட் செய்து கோரோன மாத்திரை என்று வதந்தி பரப்பியுள்ளனர். மற்றபடி இது சளிக்கு பரிந்துரைக்கப்படும் பழைய மருந்துதான். கொரோனாவுக்கு பயன்படும் மருந்து என்று புதிதாக வதந்தி பரப்பி வருகின்றனர்” என்றார்.

நாம் மேற்கொண்ட தேடலிலுக்கு அமைய கொரோனா வைரஸிற்கு 1914 ஆம் ஆண்டே மருந்து இருந்து என பகிரப்படும் தகவல் தவறானது என உறுதி செய்யப்படுகின்றது.

இது தொடர்பாக எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:கொரோனா வைரஸிற்கு 1914 ஆம் ஆண்டே மருந்து இருந்ததா?

Fact Check By: Nelson Mani 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *