INTRO :
நாட்டை விட்டு வெளியேற கோட்டபாய ராஜபகஷ முயற்சித்த சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படம் என ஒரு வீடியோ மற்றும் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக , நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போதிலும், இலங்கையின் குடிவரவு பணியாளர்கள் அதனை தடுத்ததாக உத்தியோகபூர்வ தரப்புக்களை மேற்கோள்காட்டி AFP செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது மனைவியும் சர்வதேச விமான நிலையத்திற்கு அடுத்துள்ள இராணுவ தளத்தில் நேற்றைய இரவைக் கழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை புதன்கிழமை பதவி விலகுவதாகவும், அமைதியான அதிகார மாற்றத்திற்கான வழியை தெளிவுபடுத்துவதாகவும் ஏற்கனவே அவர் உறுதியளித்துள்ளார்.

எனினும், தப்பிச்செல்லும் போது தமது சொந்த நாட்டிலேயே சிக்கியுள்ளதாக ஏ.எஃப்.பி குறிப்பிட்டுள்ளது.

73 வயதான ஜனாதிபதி கோட்டாபய, கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, தாம் பதவி விலகுவதற்கு முன் வெளிநாடு செல்ல விரும்பியதாக நம்பப்படுகிறது.

எனினும் குடிவரவு அதிகாரிகள் அவரது கடவுச்சீட்டை முத்திரையிட மறுத்துவிட்டனர்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவும் இன்று (12) அதிகாலை குடிவரவு அதிகாரிகளால் தடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் திரும்பிச்சென்றுள்ளார்.

இதனையடுத்து மத்தள மஹிந்த ராஜபக்ஷ விமான நிலைய குடிவரவு அதிகாரிகளும் தமது கடமைகளில் இருந்து விலகியுள்ளனர்.

இதேவேளை கோட்டாபய மற்றும் பெசில் ஆகியோருக்கு விமான நிலையங்களின் ஊடாக தப்பிச்செல்லமுடியாத நிலையில், கடற்படைக் கப்பல் மூலம் இந்தியா அல்லது மாலைத்தீவுக்கு செல்வதே தற்போதுள்ள வழியாகும் என்று பாதுகாப்பு தரப்பை கோடிட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. “ என இம் மாதம் 12 ஆம் திகதி (12.07.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த கோட்டாபய ராஜபக்ஷவையும் அவரது மனைவியையும் விமான நிலைய குடிவரவு பணியாளர்கள் தடுத்தனர் ;

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக , நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போதிலும், இலங்கையின் குடிவரவு பணியாளர்கள் அதனை தடுத்ததாக உத்தியோகபூர்வ தரப்புக்களை மேற்கோள்காட்டி AFP செய்திச்சேவை தெரிவித்துள்ளது. “ என இம் மாதம் 12 ஆம் திகதி (12.07.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

கோட்டபாய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போது என பகிரப்படும் வீடியோ மற்றும் புகைப்படம் தொடர்பில் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக ஆய்வினை மேற்கொண்டோம்.

குறித்த வீடியோவை நாம் நன்கு அவதானித்த போது அது முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவான பிறகு விமான நிலைய பணிகள் தொடர்பில் ஆய்வு செய்ய மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ போன்று எமக்கு சந்தேகம் எழ நாம் அது குறித்து ஆய்வினை மேற்கொண்டோம்.

நாம் கூகுளில் keywords பயன்படுத்தி மேற்கொண்ட தேடுதலில் அது குறித்து வெளியான செய்திகள் எமக்கு கிடைத்தது. நாம் குறித்த புகைப்படம் மற்றும் வீடியோவை ஒப்பிட்டு ஆய்வு செய்த போது, முன்னாள் ஜனாதிபதி கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்டு அங்கு நடக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ என உறுதி செய்யப்பட்டது.

themorning.lk | Achieved link

இலங்கை நாட்டிலிருந்து கடந்த 13 ஆம் திகதி (13.07.2022) விமானப்படையின் விமான மூலம் மாலைத்தீவிற்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அங்கிருந்து 14 ஆம் திகதி (14.07.2022) சவுதி அரேபியன் எயார்லைன்ஸ் ஊடாக சிங்கப்பூர் நோக்கி விஜயத்தினை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் நெருக்கடி நிலை காரணமாக Silk Route/CIP passengerபகுதிகளில் பயணிகளை அனுமதிப்பது தொடர்பான நடவடிக்கைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்கம் அறிக்கையொன்றில் கடந்த 12 ஆம் திகதி (12.07.2022) தெரிவித்திருந்து.

குறித்த தகவல் போலியானது என இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளின் சங்கம் அன்றே ஒரு அறிக்கையினை வெளியிட்டிருந்தது.

மேலும் AFP செய்திச்சேவை விமான நிலைய மறுப்பிற்கு பிறகு இலங்கை ஜனாதிபதி கடல் வழியே தப்பிக்க முயன்றார் என்ற செய்தி தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தமையும் காணக்கிடைத்தது. Link 1

கோட்டபாய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த சம்பவம் என பகிரப்படும் வீடியோ மற்றும் புகைப்படம் கடந்த 2020 வருடம் முன்னாள் ஜனாதிபதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினை ஆய்வு செய்ய சென்ற சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்டவை என உறுதி செய்யப்படுகிறது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:கோட்டபாய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த வீடியோவா இது?

By: S G Prabu

Result: Explainer