
INTRO :
ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் உறுப்பினராக பி.எஸ்.எம். சார்ள்ஸ் நியமனம் என ஒரு தகவல் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் ” 2/11/2021. Media news. ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் உறுப்பினராக பி.எஸ்.எம். சார்ள்ஸ் நியமனம்!
ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் தமிழ் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பி.எஸ்.எம். சார்ள்ஸ் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினராக நியமிக்கப்படவிருந்தார். எனினும், பின்னர் அவரை ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் நியமிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்த செயலணியின் தலைவராக ஞானசார தேரர் அறிவிக்கப்பட்டிருந்தார்.
மேலும் இந்த செயலணியில் தமிழர்கள் எவரும் இணைத்துக்கொள்ளப்படவில்லை. இந்த விடயம் குறித்து பலரும் அதிருப்பதி வெளியிட்டிருந்த நிலையில், தமிழர்கள் மூவரை செயலணியில் இணைத்துக்கொள்ள ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பின்னணியிலேயே ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் தமிழ் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “ என இம் மாதம் 02 ஆம் திகதி (02.11.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
நாம் இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வின் போது, கடந்த மாதம் 26 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி தாபிக்கப்பட்டது.
குறித்த செயலணியில் தமிழ் பிரதிநிதிகள் இல்லாதமை சிறுபாண்மை மக்களான தமிழ் மக்களுக்கு அநிதி இழைக்கப்பட்டுள்ளதாக கருத்துக்கள் வெளியாகிய வண்ணம் இருந்தது.

இதன் குழப்பத்தில் மத்தியில் நடந்த ஆளுங்கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் போது, ஜனாதிபதி ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் மூன்று தமிழர்களை இணைத்துக்கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
இந்நிலையில் கடந்த 2 ஆம் திகதி முதல் வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் குறித்த ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாக தொடங்கியது.
இதுகுறித்து நாம் ஜனாதிபதி ஊடகம் மற்றும் இந்த செயலணியின் தலைவரின் ஊடகப்பிரிவினை தொடர்புக்கொண்ட போது இது குறித்தான தகவல் எமக்கு அறிய முடியாமல் போயிருந்தது.
மேலும் கடந்த 6 ஆம் திகதி வெளியான வர்த்தமானிக்கு அமைய, ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான செயலணியின் அங்கத்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்திருந்தமை காணக்கிடைத்தது.
அதில் தமிழ் பிரதிநிதிகள் 3 பேரின் பெயர்கள் உள்வாங்கப்பட்டிருந்தமையும் காணக்கிடைத்தது. குறித்த செயலணியில் இராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன், யோகேஸ்வரி பத்குணராஜா, ஐயம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோரே புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களாவர்.

எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் உறுப்பினராக பி.எஸ்.எம். சார்ள்ஸ் நியமனம் என்ற தகவல் முற்றிலும் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் உறுப்பினராக பி.எஸ்.எம். சார்ள்ஸ் நியமனமா?
Fact Check By: S G PrabuResult: False

Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team