
INTRO :
தம்புத்தேகம பகுதியில் 1965kg நிறையுடைய மீன் பிடிக்கப்பட்டுள்ளதாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “ தம்புத்தேகம பகுதியில் பாலத்திற்கடியில் 37 மீற்றர் நீளமும் 1965kg நிறையுடைய மீன் பிடிக்கப்பட்டுள்ளது. “ என இம் மாதம் 26 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (26.07.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் முதலில் தம்புத்தேகம பகுதியில் இவ்வாறான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக செய்திகள் பிரதான ஊடகங்களில் வெளியாகியுள்ளதா என்று ஆய்வு செய்தபோது, அவ்வாறான எவ்விதமான செய்தியும் பதிவாகவில்லை.
இதனை தொடர்ந்து குறித்த புகைப்படத்தினை நன்கு அவதானித்த போது, அது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதை போன்று காணப்பட்டமையினால் நாம் அதனை Hive Moderation என்ற செயற்கை நுண்ணறிவை கண்டறியும் இணையத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு மேற்கொண்டோம்.
அதில் குறித்த புகைப்படம் 99.9% செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
மேலும் isitai.com இணையத்திலும் இதனை நாம் ஆய்வு செய்த போது, இது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படம் என்று தெரியவந்தது.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், தம்புத்தேகம பகுதியில் 1965kg நிறையுடைய மீன் பிடிக்கப்பட்டுள்ளதாக பரவும் புகைப்படம் செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:தம்புத்தேகம பகுதியில் 1965kg நிறையுடைய மீன் பிடிக்கப்பட்டதா?
Fact Check By: S.G.PrabuResult: False


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team