
INTRO :
பாலஸ்தீனியர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் என தெரிவித்த அமெரிக்க அமைச்சரை தாக்கிய முஸ்லீம் பத்திரிகையாளர் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் “ அமெரிக்க அமைச்சர் பேசியது:
#அனைத்து #பாலஸ்தீனியர்களும் #கொல்லப்பட வேண்டும்.
🌹ராடி ஹலிப் என்ற முஸ்லீம்🌹
🌹பத்திரிக்கையாளர் 🌹
சிங்கம் போல் ;
அவள் மீது பாய்ந்த காட்சியை
நாம் பார்க்கும் போது.
சுபுஹானல்லாஹ் !
அல்லாஹு அக்பர் !
🕋*┈┉┅━❀•☪•❀━┅┉┈ 🕋
நாரே தக்பீர் ;
அல்லாஹு அக்பர் !
நாரே ரிஸாலத் ;
யா ரஸுலல்லாஹ் !
உண்மையான முஃமின்கள் யார் என்றால்,
அல்லாஹ்வின் திருநாமம் அவர்கள் முன் கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்.
அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும் இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள். (8:2)
🕋*┈┉┅━❀•☪•❀━┅┉┈ 🕋
ஈமானின் சுவையைப்
பெற்றவர்கள் ; 👇
மூன்று விஷயங்கள் யாரிடம் உள்ளதோ ; அவர் ஈமானின் சுவையைப் பெற்றுவிட்டார்.
1. மற்ற அனைத்தையும் விட அல்லாஹ்வும் அவன் தூதரும் அவருக்கு மிகப் பிரியமானவர்களாக இருப்பது.
2. அவர் யாரை நேசித்தாலும் அல்லாஹ்வுக்காக நேசிப்பார்
3. இறைநிராகரிப்பை விட்டு அல்லாஹ் அவரை ஈடேற்றம் செய்த பின் மீண்டும் அந்த இறைநிராகரிப்பின் பக்கம் திரும்புவதை தம்மை நரக நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பதைப் போல வெறுக்கவேண்டும்.
அறிவிப்பாளர் : அனஸ்(ரலி)
நூல் 📕 : புகாரி, முஸ்லிம் .
நாம் எந்நிலையிலுள்ளோம் ;
நாயனின் சந்திப்பு நமக்கு
நிச்சயம் உண்டு ; அப்போது ,
கை சேதத்திலா ??? சிந்துத்து
நம்மை நிந்தித்து : ஈமானின்
நனைந்து ,நினைந்து;
ஆளும் பாக்யசீலராக வேண்டும்.ரமழானில் செய்யும்
நல் அமலுக்கான அனைத்து
நன்மையையும் பெறுவோம் ! “ என கடந்த மாதம் 30 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (30.03.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் முதலில் குறித்த வீடியோவில் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்தோம்.
குறித்த தேடலின் போது, இது “லாஸ் வேகஸ் பகுதியில் கிலார்க் கவுண்டி மாவட்ட நீதிமன்ற நீதிபதியை தாக்கிய வீடியோ ” என கண்டறியப்பட்டது.
மேலும் நாம் ஆய்வினை மேற்கொண்ட போது, கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் என கண்டறியப்பட்டது. இது தொடர்பாக பல சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டிருந்த செய்திகளும் எமக்கு காணக்கிடைத்தது.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், அமெரிக்க அமைச்சரை தாக்கிய முஸ்லிம் பத்திரிகையாளர் என பரவும் வீடியோ தவறானது என கண்டறியப்பட்டுள்ளது
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:அமெரிக்க அமைச்சரை தாக்கிய முஸ்லிம் பத்திரிகையாளர்; உண்மை தெரியுமா?
Fact Check By: S.G.PrabuResult: False


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team