
INTRO :
ரணில் ஜனாதிபதியானால் நானே பிரதமர் என ரவி கருணாநாயக்க தெரிவித்ததாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “ ரணில் ஜனாதிபதியானால் நானே பிரதமர் ரவி கருணாநாயக்க.
எப்பிடி வசதி ரணிலுக்கு வோட் போடுவமா?? “ என இம் மாதம் 05 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (05.08.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
முதலில் நாம் ரவி கருணாநாயக்க இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் என்று பிரதான ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதா என ஆய்வினை மேற்கொண்டபோது, அவ்வாறான கருத்தை அவர் தெரிவித்ததாக எவ்விதமான பிரதான ஊடகங்களிலும் செய்தி வெளியிடப்பட்டிருக்கவில்லை.
இணையத்தில் வைரலாகும் குறித்த கருத்து ஒரு சிங்கள பத்திரிகையில் வெளியானதை போன்று வடிவமைக்கப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது. ஆகவே நாம் கடந்த ஜுலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் வெளியாகிய பத்திரிகைகளை நாம் ஆய்வுக்கு உட்படுத்திய வேளையில் அவ்வாறான எவ்விதமான செய்தி வெளியாகி இருக்கவில்லை.
நாம் இது குறித்து மேலும் ஆய்வினை மேற்கொள்ள ரவி கருணாநாயக்கவின் ஊடக ஒருங்கிணைப்பாளர் சானக சிறிவர்தனவை தொடர்புகொண்டு வினவியபோது, இணையத்தில் வைரலாகின்ற பதிவு முற்றிலும் போலியானது எனவும், ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றால் பிரதமர் ஆவது குறித்து ரவி கருணாநாயக்க அவ்வாறான எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை எனவும் அவர் எமக்கு தெளிவுபடுத்தினார்.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், இணையத்தில் வைரலாகும் ரணில் ஜனாதிபதியானால் நானே பிரதமர் என ரவி கருணாநாயக்க தெரிவித்தார் எனும் தகவல் தவறானது என்று கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
இது தொடர்பாக எமது ஆங்கில பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:‘ரணில் ஜனாதிபதியானால் நானே பிரதமர்’ என்று ரவி கருணாநாயக்க தெரிவித்தாரா?
Fact Check By: S.G.PrabuResult: False


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team