
INTRO :
தூத்துக்குடி பகுதியில் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் மிருகங்கள் என சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் “ தற்போது வெளியான வீடியோ காட்சி.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல், முக்காணி, புன்னக்காயல் பகுதிகளில் மழை வெள்ளத்தின் காரணமாக தாமரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த வாயில்லா ஜீவங்கள் ஆடுகள், மாடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கோர காட்சிகள் 😱
😭
😭 “ என இம் மாதம் 26 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு (26.12.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்ட போது, முதலில் குறித்த வீடியோவில் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வுசெய்த போது, இது 2020 ஆம் ஆண்டு மெக்சிகோவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதைக் கண்டறிய முடிந்தது.
குறித்த வீடியோ 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் unoTv இணையத்தளத்தில் வெளியாகியிருந்த செய்தியில் கம்போஸ்டெலா (Compostela) என்னும் பகுதியில் உள்ள “எல் கான்சல்” (“ El Conchal ”) ஆற்றில் இடம்பெற்றது என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் தூத்துக்குடி பகுதியில் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் விலங்குகள் என பகிரப்படும் தகவல் தவறானது என்று கண்டறியப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாடுகள்?- மெக்சிகோவில் எடுத்த வீடியோவை பகிரும் நெட்டிசன்கள்…
கேரள மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் பசுக்கள்- வீடியோ உண்மையா?
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:தூத்துக்குடி மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் விலங்குகள் என பரவும் வீடியோ உண்மையா?
Written By: S G PrabuResult: False


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team