INTRO :
அரிய வகை மிருகம் ஒன்று திவுலப்பிட்டிய பிரதேசத்தில் தென்பட்டதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் “ அரிய வகை மிருகம் ஒன்று திவுலப்பிட்டிய ( கம்பஹா மாவட்டம் ) பிரதேசத்தில் தென்பட்டதாக ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது .

#வீடியோ - ஷான் “ என இம் மாதம் 22 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு (22.02.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

முதலில் குறித்த வீடியோவில் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, இது மலேசியாவில் காணப்பட்ட மிருகம் என சில பதிவுகள் எமக்கு கிடைக்கப்பெற்றது.

Facebook | Archived Link

எனினும் மலேசியா நாட்டினை சேர்ந்த Sarawak Forestry Corporation (SFC) நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இது மலேசியா நாட்டில் எடுத்த வீடியோ இல்லை என அறிவித்திருந்தது.

மேலும் குறித்த வீடியோ இந்தோனேசியாவில் சமூகவலைத்தங்களில் பரவலாகப் பரப்பப்பட்டது. மேலும் இது இந்தோனேசியாவில் நடந்த சம்பவம் அல்ல என்று இந்தோனேசிய அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

theborneopost.com I Archived link

மேலும், குறித்த வீடியோ பிரேசிலில் எடுத்ததாக டிக்டொக்கில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது.

https://www.tiktok.com/music/som-original-7195590553701010181

நாம் குறித்த விலங்கு தொடர்பாக வீடியோவிலிருந்து காட்சியாக மாற்றிய புகைப்படத்தினை ஆய்வுசெய்த போது, Myrmecophaga tridactyla என்ற விஞ்ஞான பெயரில் அழைக்கப்படும் ராட்சத எறும்புண்ணி (Giant anteaters) என கண்டறியப்பட்டது.

இது தென் அமெரிக்கா, தெற்கு பிரேசில் மற்றும் குவாத்தமாலா முதல் வடக்கு அர்ஜென்டினா வரை காணக்கூடிய விலங்கு என தெரியவந்தது.

Link 1 | Link 2 | IUCN

dnazoo.org | Archived Link

இலங்கையில் ராட்சத எறும்புண்ணி இல்லை

இலங்கையில் உள்ள எறும்புண்ணி விலங்குகள் Indian Pangolin (Manis crassicaudata) என்ற வகையினை சேர்ந்தவையாகும். இலங்கை மற்றும் இந்தியாவில் காணப்படும் இந்த விலங்குகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகின்ற நிலையில், இது சிவப்பு தரவு புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. மேலதிக தகவல்களுக்காக

இரவில் அதிக சுறுசுறுப்பாக இருக்கும் இந்த அரிய விலங்கு, தாவர பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டாலும், இலங்கையில், இறைச்சிக்காக வேட்டையாடப்படுகிறது, சட்டவிரோத சர்வதேச வர்த்தகம் காரணமாக இதன் எண்ணிக்கை குறைந்து வருவதாக

எறுப்புண்ணி உடலில் உள்ள செதில்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டுள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கலாநிதி பிரியன் பெரேரா தெரிவித்தார். Link 1 | Link 2

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok

Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:திவுலப்பிட்டி பிரதேசத்தில் தென்பட்ட அரிய வகை மிருகமா ?

Fact Check By: S G Prabu

Result: False