INTRO :

சமீபத்தில் துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தின் போது 33 கட்டிடங்களுக்கு சொந்தக்காரர் ரொட்டியில் உயிர் பிழைத்து தங்குமிடம் தேடும் நபராக மாறியுள்ளதாக ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் “ #துருக்கி_பூகம்பம்

"""""""""""""""""""""""""""""""""""

33 கட்டிடங்களின் உரிமையாளராக இருந்தவர் ரொட்டியில் உயிர் பிழைத்து, தங்குமிடம் தேடும் ஒரு நபராக அவரது நிலையை மாற்ற வெறும் 17 வினாடிகளே ஆனது

வாழ்க்கை கணிக்க முடியாதது

எதுவுமே நிரந்தரமற்றது என்ற முக்கியமான பாடத்தை நமக்கு கற்றுத் தருகிறது.

பணிவாகவும், மரியாதையாகவும், கனிவாகவும் இருங்கள். “ என இம் மாதம் 15 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு (15.02.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

கடந்த திங்கள் கிழமை (06.05.2023) அதிகாலையில் துருக்கி, சிரியாவில் நேரிட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் அறிய

எமது குழு முதலில் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி ஆய்வு செய்த போது, இது 2007 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

உண்மைப் பதிவைக் காண: haberler.com

மேலும் இது குறித்து நாம் தொடர்ந்து ஆய்வு செய்த போது, anadoluimages புகைப்படம் விற்பனை செய்யும் தளத்தில் குறித்த படம் விற்பனைக்கு இருப்பது காணக்கிடைத்தது.

anadoluimages.com I Archive

Abdurrahman Antakyalı என்ற புகைப்படம் கலைஞரினால் இது 16.08.2001 ஆம் ஆண்டு Ankaran-Slovenia பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் என பதிவிட்டுள்ளமை காணக்கிடைத்தது.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், துருக்கி பூகம்பத்தில் 33 கட்டிடங்களுக்கு சொந்தகாருக்கு ஏற்பட்ட நிலை என பகிரப்படும் புகைப்படம் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok

Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:துருக்கி பூகம்பத்தில் 33 கட்டிடங்களுக்கு சொந்தகாருக்கு ஏற்பட்ட நிலையா இது ?

Fact Check By: S G Prabu

Result: False